X
முகப்பு சினி தரவரிசை

Ethirneechal Serial: குணசேகரனுக்கு ஆட்டம் காட்டிய ஜீவானந்தம், எதிர்நீச்சல் சீரியலில் செம ட்விஸ்ட்

Author Sakthi Harinath | Updated: Thursday, July 27, 2023, 11:35 AM [IST]

எதிர்நீச்சல் சீரியல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தமிழ் சீரியல் ஆகும். இந்த சீரியல் தமிழகத்தின் நம்பர் 01 சீரியலாக கொண்டாடப்பட்டு வருகிறது. பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ள இந்த சீரியலின் திரைக்கதையில் பல சுவாரஸ்யங்கள் இருக்கின்றன. தற்போது இந்த எதிர்நீச்சல் சீரியலில் நடக்கும் மக்களின் மனதை கவர்ந்த கதைக்களம் மற்றும் தகவல்கள் இந்த பட்டியலில் உள்ளன. முழு விவரங்கள் இதோ.


cover image
எதிர்நீச்சல்

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபா மெகா தொடர் சீரியல், எதிர்நீச்சல். இந்த சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி 'ஜீவானந்தம்' கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பரபரப்பான சூழலில் உருவாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் தற்போது பலரின் கவனத்தை கவர்ந்து நம்பர் 01 சீரியலாக தமிழ் மக்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சீரியலின் இந்த வார அப்டேட் மற்றும் தற்போது வரை நடந்துள்ள சுவாரஸ்யங்களை பற்றி இங்கு விரிவாக காணலாம்.

இதுவரை

அப்பத்தா எழுந்து நடக்க முடியாமல் இருக்கிறார், ஆதிரையின் திருமணம் கரிகாலனோடு என தனக்கு சாதகமாக எல்லாம் நடக்கிறது என சந்தோசத்தில் வாழும் குணசேகரனுக்கு செம ஆப்பு வைத்து வேறு ஒரு பாதையில் கதைக்களம் நகர்கிறது. தான் இதுவரை செய்தது அனைத்தும் தனது சொத்துக்களை காக்க தான், இருப்பினும் தன்னிடம் இருந்து சொத்துக்கள் பறிபோகின்றன என பெரும் அதிர்த்தியில் குணசேகரன்.

ஜீவானந்தம்

எதிர்நீச்சல் சீரியலின் இயக்குனர் திருச்செல்வம் 'ஜீவானந்தம்' கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரது கதாபாத்திரத்தை 'தோழர்' என்று பலர் அழைக்கின்றனர். யார் இவர்? எதற்காக குணசேகரனின் சொத்துக்களை கைப்பற்றினார்? என பல விஷயங்கள் இன்னும் மர்மமாக உள்ளது. ஆதிரையின் திருமண கலாட்டாவில் ஜனனி மற்றும் குணசேகரன் இருக்க யாருக்கும் தெரியாமல், குணசேகரனின் இல்லத்திற்குள் வந்து அப்பத்தாவின் கைரேகையை திருடி குணசேகரனின் 40 சதவீத சொத்துக்களை கைப்பற்றியுள்ளார், ஜீவானந்தம்.

ஏமாந்து நிற்கும் குணசேகரன்

குணசேகரன் தனது கடின உழைப்பால் பல வழிகளில் முயற்சித்து சேர்த்து வைத்த சொத்துக்களை ஜீவானந்தம் திருடியதை கேட்டு ஆத்திரம் அடைந்து பல வழிகளில் பேச்சு வார்த்தைகள் பேசி எதிலும் ஜீவானந்தத்தை அசைக்க முடியவில்லை என கலங்கி நிருக்கிறார். சட்டப்படி மற்றும் பணபலம், படைபலம் என பல வழிகளில் ஜீவானந்தம் யாராலும் தொட முடியாத உயரத்தில் இருப்பதை அறியும் குணசேகரன் என்ன செய்வது என அறியாமல் ஏமாந்து நிற்கிறார்.

 

புதிய திட்டம்

ஜனனி மூலம் தான் தனது சொத்துக்கள் பறி போனது என நினைக்கும் குணசேகரன், மீண்டும் ஜனனி மூலம் தனது சொத்துக்களை தான் அடைய வேண்டும் என புதிய திட்டம் வகுக்கிறார். அதற்காக புதிய நாடகத்தை தொடங்கியுள்ளார், குணசேகரன். ஏற்கனவே தனது குடும்ப பெண்களை பகைத்துக்கொண்ட குணசேகரன், தனது வீட்டு பெண்கள் மூலம் தான் சொத்துக்களை அடைய வேண்டும் என ஆடிட்டர் சொல்வதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+