கலாநிதி மாறன்
Born on 24 Jul 1964 (Age 59)
கலாநிதி மாறன் பயோடேட்டா
கலாநிதி மாறன் சன் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவர் ஆவார். பூமாலை, குங்குமம் இதழ்களில் எழுதி ஊடக உலகில் முதன் முதலாக நுழைந்தார். இவர் இந்தியாவின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் 20ஆம் நிலையில் உள்ளவர. ஃபோர்ப்ஸ் இதழ் குறிப்பிட்ட படி இவர் உலகிலேயே 349ஆம் பெரும் பணக்காரர் ஆவார்.
இவரின் தந்தையார் முரசொலி மாறன் தமிழகத்தில் அரசியல்வாதியாக பணியாற்றினார். தம்பி தயாநிதியும் முன்னாள் மத்திய ஜவுளித்துறை அமைச்சராவார்.
இவர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் மருமகன் வழி பேரன் ஆவார். இவர் ஆரம்பத்தில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் உரிமையாளராக இருந்தார். அந்த நிறுவனம் தொடர் இழப்புகள் மூலம் பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்ட பொழுது, அந்த நிறுவனத்தை அதனுடைய பங்குதாரர்களில் ஒருவருக்கு விற்று விட்டு அந்த நிறுவனத்தை விட்டு வெளியேறினார்.1993 ஆம் ஆண்டில் சன் டிவி நிறுவனம் உருவானது. தமிழில் கிடைத்த அமோக வரவேற்பின் காரணமாக, கன்னடத்தில் 'உதயா', தெலுங்கில் 'ஜெமினி', மலையாளத்தில் 'சூர்யா', அலைவரிசைகளை உள்ளடக்கிய 'சன் நெட்வொர்க்' என்ற குழுமத்தை நிறுவினார்.
அதை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் மூலம் பல திரைப்படங்களுக்கு விநியோகஸ்தராக இருந்துள்ளார். மேலும் சில திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார்.