ஓமக்குச்சி நரசிம்மன்
Born on 1936 (Age 88) Kumbakonam
ஓமக்குச்சி நரசிம்மன் பயோடேட்டா
ஓமக்குச்சி நரசிம்மன் இந்திய திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவர் மெல்லிய உடல் அமைப்பு கொண்டு காணப்பட்டதால் ஓமக்குச்சி என்று அழைக்கப்பட்டார். இவர் இந்திய திரைப்படம் மற்றும் மேடை நாடகங்களில் நடிப்பவர். இவர் ஏறத்தாழ 1500-ற்கும் மேற்பட்ட இந்திய திரைப்படங்களில் நடித்துள்ளார். மொத்தம் 14 மொழி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் ஆவார்.
1936-ம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சி காலத்தில் கும்பகோணத்தில் பிறந்த இவர், குடும்ப வறுமை காரணமாக மேடை நாடங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். பின்னர் 1949-ம் ஆண்டு ஔவையார் என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி திரைத்துறைக்குள் நுழைந்தவர், பின்னர் 1980-ம் ஆண்டு வரை எந்த திரைப்படங்களிலும் நடிக்காமல், கல்வியில் ஆர்வம் கொண்டு திகழ்ந்தார்.
இவர் சரஸ்வதி என்ற பெண்ணை திருமணம் புரிந்துள்ளார், இவர்களுக்கு 3 மகள்களும், 1 மகனும் உள்ளனர்.
இவர் தனது இளங்கலைப் பட்டம் முடிந்ததும், எல்.ஐ.சி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார். பின்னர் கௌரி கல்யாணம் திரைப்படத்தில் நடித்து மீண்டும் திரையுலகில் நடிக்க தொடங்கியுள்ளார். 1500-ற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர், இறுதியாக சுந்தர் சி நடித்த தலைநகரம் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
ஓமக்குச்சி நரசிம்மன் 2009 மார்ச் 12ல் தொண்டை புற்றுநோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.