twitter

    ராஷ்மிகா மந்தனா பயோடேட்டா

    ராஷ்மிகா மந்தனா (ரஷ்மிகா மந்தண்ணா) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்துவருகிறார். இவர் 2016-ம் ஆண்டு நடித்த 'கிரிக் பார்ட்டி' என்ற கன்னடம் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர்.

    பிரபலம்
    2016-ம் ஆண்டு 'கிரிக் பார்ட்டி' என்ற கன்னடம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், 2018-ம் ஆண்டு "சலோ" என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகியுள்ளர். பின்னர் அதே ஆண்டு இவர் நடித்து வெளிவந்த 'கீதா கோவிந்தம்' என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகில் பிரபலமானவர். இத்திரைப்படத்தின் மூலம் முன்னணி நடிகையாக சித்தரிக்கப்பட்டார்.

    இவர் நடிக்கும் திரைப்படங்களின் இவரது கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகிவருகிறது. இணையத்தளத்தில் இவரால் வெளியிடப்படும் இவரது புகைப்படங்கள் பெரும் ஆதரவை பெற்று வருகிறது.


    பிறப்பு / தனிப்பட்ட வாழ்க்கை
    இவர் கர்நாடகத்தில் உள்ள குடகு மாவட்டத்தின் விராஜ்பேட்டையில் கௌடவ குடும்பத்தில் பிறந்துள்ளார். 

    இவர் 2016-ம் ஆண்டு கிரீக் பார்ட்டி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். இத்திரைப்படத்தின் நாயகனான ரக்ஷித் ஷெட்டி என்பவரை காதலித்தார், இவர்கள் திருமணத்திற்கு ஜூலை 3, 2017-ல் நிச்சியதார்தம் நடந்தது, பின்னர் 2018ல் இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

    திரையுலக தொடக்கம்

    2016-ம் ஆண்டு கிரீக் பார்ட்டி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர். பின்னர் இவர் நடிப்பில் வெளிவந்த தெலுங்கு திரைப்படமான கீதா கோவிந்தம் திரைப்படத்தின் புகழை தொடர்ந்து இவர் தென்னிந்தியாவில் முன்னணி நடிகையானவர்.

    இவர் தமிழில் 2019-ம் ஆண்டு நடிகர் கார்த்தி சிவகுமாரின் 19வது திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார். இத்திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே சிவகார்த்திகேயனின் எஸ் கே 17, டியர் காம்ரேட் என தமிழ் திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

    ரசிகர்கள்

    ராஷ்மிகா மந்தண்ணா 2019-ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவரும் பிகில் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக வெளிவந்த தகவலை தொடர்ந்து இவரின் பெயர் தமிழில் பிரபலமாக பரவிவந்துள்ளது. ஆனால் ராஷ்மிகா பிகில் திரைப்படத்தில் நடிக்கவில்லை என்று அறிந்ததும் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    ஆனால் தற்போது கார்த்தியின் 19-வைத்து திரைப்படத்திலும், சிவகார்த்திகேயன் படத்திலும் நடித்துக்கொண்டு வருகிறார். ராஷ்மிகா பிகில் படத்தினை தொடர்ந்து விஜய் நடிக்கும் தளபதி 64-வைத்து திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் பரவலாக திரையுலக வட்டாரங்களில் பரவி வருகிறது.

    இந்நிலையில் சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் "எனது சிறுவயதில் தமிழகத்தில் குஷ்பூ-விற்கு திரைப்பட ரசிகர்கள் கோயில் ஒன்றினை கட்டி உள்ளனர் என்று எனது தந்தை கூறியுள்ளார்". பின்னர் "தமிழில் அறிமுகமாவது எனக்கும் ஆர்வமாகவுள்ளது, நானும் அத்தகைய ரசிகர்கள் பெறுவேன் " என்று கூறியுள்ளார்.