எஸ் பி ஜனநாதன் தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் இயக்கிய முதல் திரைப்படமான இயற்கை என்னும் திரைப்படத்திற்காக தேசிய விருது வழங்கப்பட்டது. பி லெனின், பரதன், வின்சென்ட் செல்வா மற்றும் கேயர் போன்றவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ள இவர், தமிழ் திரையுலகில் ஜனரஞ்சகமான பல வெற்றி படங்களின் மூலம் புகழ் பெற்றவர்.
தமிழ் சினிமாவில் இயக்குனர், எழுத்தாளர், தயாரிப்பாளர் என பல முகங்களில் அறியப்படும் இவர், தான் இயக்கும் திரைப்படங்களில் ஜனநாயகத்திற்கு எதிர்மறையாக உள்ள அழுத்தமான வசனங்கள் மற்றும் காட்சிகளை பதிவு செய்து மக்கள் மத்தியில் கொண்டாடப்படுபவர்.
எஸ் பி ஜனநாதன், தமிழ் சினிமாவில் இயக்கிய முதல் திரைப்படமான இயற்கை திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்றுள்ளார். தமிழ் சினிமாவில் இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடைமை, லாபம் போன்ற திரைப்படங்களை இயக்கியும், பூலோகம் திரைப்படத்திற்கு வசனங்கள் எழுதியுள்ளார்.
2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14ல் உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ் பி ஜனநாதன், சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.