சமீரா ரெட்டி
Born on 14 Dec 1980 (Age 43) ஆந்திரா
சமீரா ரெட்டி பயோடேட்டா
சமீரா ரெட்டி ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார்.
ஆந்திர மாநிலத்தில் உள்ள ராஜமுந்திரி என்னும் இடத்தில் ஒரு தெலுங்கு குடும்பத்தில் 1982ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ஆம் நாள் சமீரா ரெட்டி பிறந்தார். அவரது தந்தை போக்குவரத்து வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார், அவரது தாயார் நட்சத்திரா ரெட்டி குடும்பத்தலைவி ஆவார். அவருக்கு மேக்னா ரெட்டி, சுஷ்மா ரெட்டி என இரண்டு சகோதரிகள் உள்ளனர். அவர் மும்பை நகரின் மஹிம் என்னுமிடத்தில் உள்ள பாம்பே ஸ்காட்டிஷ் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் சிடென்ஹெம் கல்லூரியில் பட்டம் பெற்றார். 21-01-2014 அன்று அக்ஷய் வர்டே என்ற தொழில் அதிபரை மணம் புரிந்தார்.
சமீரா ரெட்டி பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருக்கையில் "அவுர் ஆஹிஸ்தா" என்ற பங்கஜ் உதாஸின் இசை தொலைக்காட்சியில் அறிமுகமானார். அவர் பாலிவுட் திரையுலகத்தின் கவனத்தை ஈர்த்தார். அவர் 2002 ஆம் ஆண்டில் மெய்னே தில் துஜ்கோ தியா என்ற இந்தி திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தைப் பெற்றார். அவர் முஸாபிர் என்னும் திரைப்படத்தில் 2004ஆம் ஆண்டு தோன்றினார்.
பாலிவுட் திரைப்படங்களைத் தவிர அவர் சில தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களிலும் தோன்றினார். பெருவெற்றிபெற்ற தமிழ் திரைப்படமான கௌதம் மேனன் இயக்கி வெளிவந்த வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் சமீரா நடித்தார். சமீராவின் நடிப்பு மற்றும் தன்னம்பிக்கை கொண்ட அடக்கமான நடைமுறை பெண்ணான மேக்னா என்ற கதாபாத்திரத்தின் சித்தரிப்பு அவருக்கு பாராட்டும்படியான விமர்சனங்களைப் பெற்றுத்தந்தது. அவர் ஒரு ஒல்லியான நவீன பெண்ணாக தோன்றுவதற்கு தன்னுடைய எடையைக் குறைத்து அதிகப்படியான ஒப்பனை செய்துகொண்டார் என்று கருதப்படுகிறது.
அவருடை நடிப்பு இதுவரையில் அவர் நடித்ததிலேயே சிறந்தது என்று மதிப்பிடப்பட்டது என்பதுடன் முக பாவனைகளுக்கு வழங்கப்பட்ட அதிகப்படியான முக்கியத்துவத்தோடு மிக நுட்பமான உரையாடலைப் பேசுபவராகவும் அவருடைய கதாபாத்திரம் அமைக்கப்பட்டிருந்தது. அவருடைய தொழில்வாழ்க்கை வரைபடத்தில் நிச்சயமான உயர்வு இருக்கிறது என்பதுடன் அவருக்கு திரைப்படத்துறையில் ஒரு பிரகாசமான எதிர்காலமும் இருக்கிறது. முஸாபிர் திரைப்படத்தில் அவருடைய கதாபாத்திரம் அவருக்கு ஒரு கவர்ச்சியான பிம்பத்தை அளித்தது. அதன்பிறகு அவர் இதுபோன்ற கதாபாத்திரங்களைத் தேர்வுசெய்வதைக் கைவிட முயற்சிப்பதாக தெரிகிறது.
சமீராவிற்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதுடன் முன்னணி பாலிவுட் நடிகையாக வருவதற்கு அவர் உழைத்து வருகிறார். இந்தி திரைப்படங்களில் நடிப்பதற்கும் மேலாக அவர் சில தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.