அஞ்சான் 2014ம் ஆண்டு வெளிவந்த ஒரு அதிரடித் தமிழ்த் திரைப்படமாகும். இந்த திரைப்படத்தை லிங்குசாமி இயக்க, லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சூர்யா நடிக்க, இவருக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். இவர்களுடன் வித்யூத் ஜம்வால், சூரி, மனோஜ் பாஜ்பாய் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்த திரைப்படம் ஆகஸ்ட் 15, 2014 வெளியிடப்பட்டது. இத் திரைப்படம் தெலுங்கு மொழியில் "சிகந்தர்" எனும் பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கதை
தனது அண்ணன் ராஜூ (சூர்யா) வை தேடி கன்னியாகுமரியில் இருந்து கால் ஊனமுடைய கையில் குச்சி வைத்துள்ள கிருஷ்ணா(சூர்யா) என்ற பெயரில் மும்பை வருகிறார். அங்கு தனது அண்ணன் ராஜூ பாய் என்ற பெயரில் பெரிய தாதாவாக இருந்ததை அறிகிறார். ஆனால் ராஜூ பாய் இருக்குமிடம் தெரியாமல் அல்லாடுகிறார். ராசு பாயின் எதிரிகள் இவரையும் கொல்ல முயல்கின்றனர். இறுதியில் ராஜூ பாயிடம் வேலைபுரிந்த கரிம் பாயை சந்திக்கிறார். அவர் மூலம் ராஜூ பாயின் கடந்த காலத்தை அறிகிறார்.
ராஜூ பாயும் சந்துருவும் இணைபிரியா நண்பர்கள் என்றும் சந்துரு கொல்லப்பட்டு விட்டார் என்றும் தெரியவருகிறது. ஆனால் ராஜூ பாய் இருக்கிறாரா இல்லையா என்பது தெரியவில்லை. மும்பை காவல்துறை ஆணையர் மூலம் இவர்களுக்கு பலத்த நெருக்கடி ஏற்பட்டதால் அவரின் மகளை திருமண நாளுக்கு முந்தைய இரவு கடத்துகிறார் ராஜூ பாய். இறுதியில் ஆணையரின் மகளும் ராஜூ பாயும் காதலில் வீழ்கின்றனர்.
சந்துருவும் ராஜூ பாயும் அவர்களை விட பெரிய தாதாவான இம்ரன் பாயின் எதிர்ப்பை பெறுகின்றனர். என்பதை கண்டறிய ராஜூ பாய் மீண்டும் கிருஷ்ணாவாக வந்ததை அனைவரும் அறிகின்றனர். இறுதியில் சந்துரு எப்படி கொலை செய்யப்பட்டார், ஆணையர் மகளின் காதல் நிறைவேறியதா? ராஜூ இந்த முடிச்சுகளை எப்படி அவிழ்க்கிறார்? இம்ரன் பாயுக்கு என்ன ஆனது? என்பதை இயக்குநர் பல திருப்பங்களுடன் சொல்லியுள்ளார்.