காவியத்தலைவன் 2014ஆம் ஆண்டு வெளியான தமிழ் வரலாற்று அறிவியல் திரைப்படம். இந்தத் திரைப்படத்தை வசந்தபாலன் இயக்க, பிரித்விராஜ், சித்தார்த், வேதிகா, நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படத்துக்கு ஏ. ஆர். ரகுமான் இசை அமைக்க, நீரவ் ஷாவி ஒளிப்பதிவு செய்தார்.
கதை
காவிய தலைவன் காளியப்ப பாகவதர் (சித்தார்த்) மற்றும் கோமதி நாயகம் பிள்ளை (பிரித்திவிராஜ்) என்ற இரு கலைஞர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் திறமையை வெளிக்கொணரும் குரு தவத்திரு சிவதாஸ் சுவாமிகளின் நாடக சபாவின் கதையாக இக்கதை அமைகிறது. ஒருகட்டத்தில் ஸ்வாமிகள் காலமாக பின் அந்நாடக சபா காளியப்பாவை தவிர்த்து கோமதி தனியாக நடத்தி வருகிறார்.
நீண்ட இடைவேளைக்கு பின் மீண்டும் நடிக்க ஆரம்பிக்கிறார் காளியப்பா. அவரின் வளர்ச்சியால் கோமதியின் நடக்க சபா கலையிழக்க பின் அவர்களின் நாடக வாழ்க்கை என்ன ஆயிற்று? திசை மாறிய கோமதி மற்றும் காளியப்பாவின் வாழ்க்கை எவ்வாறு மாறியது? என்பதே நாடகத்தின் இறுதி கதையாக அமைந்துள்ளது.