பீட்சா 3 இயக்குனர் மோகன் கோவிந்த் இயக்கத்தில் அஸ்வின், பவித்ரா மாரிமுத்து, ரவீனா தஹ நடிக்கும் திகில் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் சி.வி.குமார் தயாரிக்க, இசையமைப்பாளர் அஸ்வின் ஹேமந்த் இசையமைத்துள்ளார்.
பீட்சா 3 - திரைப்படத்தின் கதை
சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் வாழ்ந்து வரும் அனுபமா குமார் ஒரு ஸ்வீட் கடை நடித்துகிறார். அவரின் மகள் ஒரு விபத்தில் சிக்கி மறதி நோயுடன் உயிர் தப்புகிறார். இதனை அறிந்த அந்த அப்பார்ட்மெண்ட்-ல் வாழும் சிலர் அந்த பெண்ணிடம் பாலியல் வன்கொடுமை செய்கின்றனர்.
இது ஒரு சமயத்தில் அனுபமா குமாருக்கு தெரிய வருகிறது. அனுபமா குமார் இவர்கள் மீது புகார் அளித்து விடுவார் என்ற பயத்தில் அனுபமா மற்றும் அவரது மகளை கொலை செய்து விடுகின்றனர், அந்த அப்பார்ட்மெண்ட்-ல் வாழும் மூன்று நபர்கள்.
பின் அதே இடத்திற்கு அஷ்வின் வருகிறார். அங்கு வாழ்ந்து வரும் அஸ்வின் அந்த இடத்தில பேய் இருப்பதை பற்றி அறிகிறார். பின் என்ன நடக்கிறது என்பது தான் படத்தின் மீதிக்கதை.