சத்திய சோதனை இயக்குனர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் பிரேம்ஜி, ரேஷ்மா நடிக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் சமீர் பாரத் ராம் தயாரிக்க, இசையமைப்பாளர் ரகுராம் இசையமைத்துள்ளார்.
சத்திய சோதனை கதை
ஒரு குக்கிராமத்தில் நடக்கும் கொலை, அதனை அந்த கிராமத்தில் அமைந்துள்ள காவல் நிலைய காவலர்கள் எப்படி விசாரிக்கின்றனர், என்பதே படத்தின் கதை.
இரு கிராமத்துக்கு நடுவே இருக்கும் எல்லையில் ஒரு கொலை நடக்கிறது. அந்த வழியாக செல்லும் பிரேம்ஜி கொலை செய்யப்பட்டவரின் செல் போன் மற்றும் நகையை எடுத்துக்கொண்டு போலீஸ் ஸ்டேஷன் சென்று தகவல் கொடுக்கிறார். பின் போலீஸ் சந்தேகத்தின் அடிப்படையில் பிரேம்ஜியை விசாரணை கைதியாக எடுத்துக்கொள்கிறது.
இந்த பிரச்சனையை பிரேம்ஜி எப்படி சமாளித்தார் என்னும் நகைச்சுவை கதை அம்சம் கொண்ட திரைப்படம் தான், சத்திய சோதனை கதை.