twitter

    ஒங்கள போடணும் சார் கதை

    உங்கள போடான்னு சார் இயக்குனர் ஸ்ரீஜித் மற்றும் ஆர்.எல்.ரவி இணைந்து இயக்கவுள்ள நகைச்சுவை மற்றும் திகில் திரைப்படம். இத்திரைப்படத்தில் ஜித்தன் ரமேஷ், சனுஜா சோமநாத், ஜோனிட்டா, அனு நாயர், பரிட்சித்தா மற்றும் வைஷாலி நடிக்கவுள்ளனர். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் மனோஜ் தயாரிக்க, இசையமைப் பாளர் ரெஜி மோன் இசையமைக்கவுள்ளார்.

    ஒங்கள போடான்னு சார் திரைப்படத்தின் கதை

    ஒங்கள போடான்னு சார் திரைப்படத்தின் நாயகன் ஜித்தன் ரமேஷ் மற்றும் நாயகி சனுஜா சோமநாத் இருவரும் காதலித்து வருகிறார்கள். ஊரில் கடன் தொல்லையில் இருக்கும் ரமேஷ், எப்படியாவது அதை அடைத்துவிட்டு காதலியுடன் சந்தோசமாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இந்நிலையில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் மனோபாலா பாலா தனது தொலைக்காட்சியின் டி ஆர் பி-காக ஒரு நிகழ்ச்சி ஒன்றினை நடித்துகிறார்.

    ஒரு கிராமத்தில் இருக்கும் ஒரு வீட்டில் பேய் இருப்பதாக கூறி மக்கள் அங்கு செல்ல அஞ்சுகிறார்கள். இதனை அறிந்த மனோபாலா பிக் பாஸ் போன்று ஒரு நிகழ்ச்சியை தொடங்குகிறார். ஒரு வாரம் அந்த வீட்டில் தங்கியிருந்தால் ரூபாய் 1 கோடி வழங்கப்படும் என்று ஒரு போட்டியினை தொடங்க, அதில் கலந்துகொள்ள 4 ஜோடிகள் வருகின்றனர். அதில் ரமேஷ் மற்றும் சனுஜா சோமநாத் ஆகியோரும் ஒரு ஜோடி.

    அந்த வீட்டில் ஒரு வாரம் தங்குவதற்கு 4 ஜோடிகள் வருகின்றனர். தீடிரென நாயகன் ரமேஷ் நடவடிக்கையில் சில மாற்றங்கள் தெரிகிறது. ஒரு பெண் வேடம் அணிந்து அவர் மூவரை கொலைசெய்கிறார். இதனை அறிந்த போலீஸ் அவரை கைதி செய்கிறது. நிஜத்தில் அங்கு பேய் உள்ளதா? பின் அவர் என்ன ஆனார்? என்பதே படத்தின் கதை.

    **Note:Hey! Would you like to share the story of the movie ஒங்கள போடணும் சார் with us? Please send it to us ([email protected]).