X
முகப்பு சினி தரவரிசை

Aranmanai 4 Box Office: 3 நாட்களில் 18 கோடிகள் வசூல் செய்த பிளாக்பஸ்டர் அரண்மனை 4

Author Sakthi Harinath | Published: Monday, May 6, 2024, 01:18 PM [IST]

Aranmanai 4 Box Office: 3 நாட்களில் 18 கோடிகள் வசூல் செய்த பிளாக்பஸ்டர் அரண்மனை 4 - முழு விவரங்கள் இதோ. இந்த பட்டியலில் சென்ற வாரம் வெளியான சுந்தர் சி இயக்கிய அரண்மனை 4 திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் குறித்து முழு தகவல்கள் விரிவாக உள்ளது. 3 நாட்களில் அரண்மனை 4 படம் வசூலித்துள்ள வசூல் விவரங்கள் இதோ.


cover image

உள்ளடக்கப்பட்டியல்

அரண்மனை 4

அரண்மனை 4 - இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை, அரண்மனை 2, அரண்மனை 3 ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து உருவாகும் 4ஆம் பாக திகில் - திரில்லர் திரைப்படம். இப்படத்தின் இயக்குனர் சுந்தர் சி நாயகனாக நடிக்க, இவருடன் இணைந்து தமன்னா, ராசி கண்ணா, யோகி பாபு, சந்தோஷ் பிரதாப், கோவை சரளா என தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


அரண்மனை 4 திரைப்படத்தினை இப்பட இயக்குனர் சுந்தர் சி, குஷ்பூ சுந்தர் மற்றும் அருண் குமார் இணைந்து அவ்னி சினிமேக்ஸ் மற்றும் பென்ஸ்ஸ் மீடியா நிறுவனம் மூலம் தயாரித்துள்ளனர். இப்படத்தினை ஏசியன் சுரேஷ் என்டர்டைன்மெண்ட் நிறுவனம் விநியோகம் செய்துள்ளது.


aranmanai 4 - story

தமன்னா பெற்றோரின் எதிர்ப்பை மீறி சந்தோஷ் பிரதாப்-யை காதல் திருமணம் செய்து கொள்கிறார். இதனால் பெற்றோரை பிரிந்து இருவரும் 10 வருடங்களாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.


ஒரு நாள் அதிகாலையில் சந்தோஷ் பிரதாப் இறந்து போகிறார், அதே நாளில் தமன்னா தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறார். இவர்களின் மரணத்தை பலர் சாதாரணமாக கடந்து செல்கின்றனர். தமன்னா-வின் மரண செய்தியை அறியும் சுந்தர் சி (தமன்னாவின் அண்ணன்), ஊருக்கு வருகிறார்.


தமன்னா மரணத்திற்கு பின்பு அந்த ஊரில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு துப்பறிவாளனாக மாறுகிறார், சுந்தர் சி. பின் தமன்னா வாழ்ந்து வந்த அரண்மனையில் அமானுச சக்தி இருப்பதாக பல வதந்திகள் வருகிறார்.


சுந்தர் சி, தமன்னாவின் மரணத்திற்கான காரணம் மற்றும் அந்த அரண்மனையில் இருக்கும் அமானுச சக்தி பற்றிய உண்மையை அறிந்து அதனை எப்படி சமாளிக்கிறார் என்பதே அரண்மனை 4 திரைப்படத்தின் கதை.


aranmanai 4 - review

சுந்தர் சி இயக்கத்தில் வெளியாகியுள்ள அரண்மனை 4 திரைப்படம், தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு பெற்று வெற்றி படமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படத்தின் ரிசல்ட் பிளாக்பஸ்டர் படமாக அமைந்து அரண்மனை 4 படக்குழுவை திருப்திப்படுத்தி உள்ளது.


வழக்கமான அரண்மனை படத்திற்கான கதைக்களம் இப்படத்திலும் அமைந்திருந்தாலும், திரைக்கதையில் வெரைட்டி காட்டி இயக்கியுள்ளார், சுந்தர் சி. பல தரப்பு ரசிகர்கள் மத்தியில் இப்படம் வரவேற்பினை பெற்று பாசிட்டிவ் ரிசல்ட் பெற்றுள்ளது.


தரம் இல்லாத தமிழ் படங்களால் பல பிளாப் படங்களின் வெளியீட்டால் மோசமான நிலையில் விமர்சனம் செய்யப்பட்ட தமிழ் சினிமாவில், சுந்தர் சி இயக்கிய அரண்மனை 4 திரைப்படம் வெளியாகி பலர் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் மூலம் தமிழ் சினிமாவை ஒரு இக்கட்டான சூழலில் இருந்து காப்பாற்றியுள்ளார், சுந்தர் சி என பலர் தங்களின் கருத்துகளை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.


collection report

அரண்மனை 4 திரைப்படம் 2024 மே 3ல் வெளியாகி உலகளவில் பல ரசிகர்கள் தரப்பில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. முதல் நாள் முடிவில் இப்படத்தின் வசூல் பற்றிய எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில் இப்படம் 3.60 கோடிகள் வசூல் செய்துள்ளது என பல சமூக வலைதள விமர்சர்கள் கூறிவந்துள்ளனர்.


தற்போது முதல் 3 நாள் முடிவில் அரண்மனை 4 திரைப்படம் 18.8 கோடிகள் வசூல் செய்திருக்கிறது, என கூகுள் நிறுவனத்தின் விக்கிப்பீடியா பக்கத்தில் அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+