X
முகப்பு சினி தரவரிசை

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதையில் இயக்குனர் மணிரத்னம் எத்தனை விஷயங்களை மாற்றியுள்ளார் தெரியுமா?

Author Sakthi Harinath | Published: Saturday, May 6, 2023, 03:23 PM [IST]

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் எழுத்தாளர் கல்கி எழுதிய நாவல் கதையை தழுவி உருவாக்கப்பட்ட வரலாற்று தமிழ் திரைப்படமாகும். இப்படம் பல மொழிகளில் உருவாகி பான் இந்திய படமாக இரு பாகங்களாக வெளியாகி 800 கோடிகளை கடந்து வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது. எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதையை மையப்படுத்தி எடுப்பதாக சொல்லி இயக்கிய மணிரத்னம் இப்படத்தின் திரைக்கதையில் பல மாற்றங்கள் செய்துள்ளார், தற்போது இந்த பட்டியலில் நாவல் கதையிலிருந்து திரைப்படமாக உருவாக்க இயக்குனர் மணிரத்னம் திரைக்கதையில் செய்துள்ள மாற்றங்கள் பற்றிய முழு விவரங்கள் இங்கு உள்ளன.


cover image
பொன்னியின் செல்வன் (PS 1)
1

பொன்னியின் செல்வன் - இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா என பல பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கும் வரலாற்று திரைப்படம். இப்படத்தினை தமிழ் பட பிரபல தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிக்க, இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் இரு பாகங்களாக உருவாகி முதல் பாகம் 2022 செப்டம்பர் 30ல் வெளியானது, தற்போது இரண்டாவது பாகம் 2023 ஏப்ரல் 28ல் வெளியாகியுள்ளது. தற்போது இந்த பட்டியலில் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதையில் இயக்குனர் மணிரத்னம் எத்தனை விஷயங்களை மாற்றியுள்ளார் என்னும் விவரங்கள் உள்ளன. இதோ

பொன்னியின் செல்வன் 2
2

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதையில் மணிமேகலை - கடம்பூர் சிற்றரசரின் இளைய மகள். இவர் வந்திதேவனின் நண்பன் கந்தமாறனின் தங்கை ஆவார். மணிமேகலை வந்தியத்தேவனை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். வந்தியத்தேவன் மற்றும் குந்தவை காதலிக்கின்றனர் என அறிந்ததும் மணிமேகலை தற்கொலை செய்து கொண்டார்.

 

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் மணிமேகலை பற்றி எந்த தகவலும் இல்லை.

3

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதையில் மதுராந்தக தேவனின் வரலாறு - பொன்னியின் செல்வன் படத்தில் மதுராந்தகராக நடிகர் ரஹ்மான் நடித்துள்ளார். இவர் உண்மையில் ஊமை ராணி என அறியப்படும் மந்தாகினி-யின் மகன் மற்றும் நந்தினியின் அண்ணன் ஆவார். இவர் மந்தாகினி மற்றும் வீரபாண்டியனுக்கு பிறந்தவர்.

 

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் மதுராந்தகன் அரசரின் பிள்ளையாக காட்டியுள்ளார்.

4

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதையில் சேந்தன் அமுதன் தான் உண்மையான செம்பியன் மஹாதேவியின் மகன். இவர் ஒரு பூ வியாபாரியாக இப்படத்தில் தோன்றியுள்ளார். சேந்தன் அமுதன் கதாபாத்திரத்தில் அஸ்வின் நடித்துள்ளார். இறுதியில் இவர் தான் உத்தம சோழனாக அரியணை ஏறுவார்.

 

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் சேந்தன் அமுதன் ஒரு பூ வியாபாரியாக இறுதி வரை காட்டியுள்ளார், இவரை பற்றிய ரகசியத்தை இப்படத்தில் மறைத்துள்ளார், மணிரத்னம்.

5

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதையில் அருண்மொழி வர்மன் விட்டுகுடுக்கும் அரியணையில் செம்பியன் மஹாதேவியின் உண்மை மகன் சேந்தன் அமுதன் என்பவர் உத்தம சோழனாக அரியணை ஏறுவார்.

 

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் மதுராந்தக தேவன் அரியணை ஏறுவார். உண்மையில் மதுராந்தக தேவன் ஒரு பாண்டிய நாட்டு வாரிசு என்பதை அறிந்தும் ஏன் மதுராந்தக தேவனை அரியணை ஏற்றினார் என்னும் குழப்பம் மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.

6

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதையில் ஆதித்ய கரிகாலனின் மரணம் இன்றும் மயமாகத்தான் உள்ளது. அவரை கொன்றது நந்தினி, வந்திய தேவன், பொன்னியின் செல்வன், பெரிய பழுவேட்டையர், பாண்டியனின் ஆபத்து உதவிகளான ரவிதாசன், சோம்பன் ஆகியோர் என பலர் சந்தேகிக்கப்படுகின்றனர். இன்றும் இதற்கான பதில் இல்லை.

 

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் பாண்டிய நாட்டு ஆபத்து உதவிகளுடன் இணைந்து நந்தினி தான் கொன்றார் என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

7

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதையில் ஆதித்ய கரிகாலனை கொன்றது வந்தியத்தேவனை கைது செய்கின்றனர், சோழர்கள் பின் வந்தியத்தேவனை சிறையில் அடைகின்றனர். அந்த சிறையில் தான் சேந்தன் அமுதன் பற்றிய ரகசியத்தை வந்தியத்தேவன் அறிகிறான். பின் அந்த ரகசியத்தை பொன்னியின் செல்வன்-யிடம் கூறி அரசனாக சேந்தன் அமுதனை நியமிக்கிறார், பொன்னியின் செல்வன்

 

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலனை கொன்றதாக சொல்லி வந்தியத்தேவனை கைது செய்யும் சோழர்கள் நேரடியாக அரச சபையில் நிறுத்திகின்றனர். பின் அங்கிருந்து வந்தியத்தேவன் போருக்கு செல்கிறார், என்னும் காட்சி மணிரத்னம் எழுதிய திரைக்கதை ஆகும்.

8

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதையில் இறுதியில் அந்த போர் நடக்காது. அந்த போர் இயக்குனர் மணிரத்னம் மாற்றி எழுதிய கதை.

9

ஆதித்ய கரிகாலனை கொன்றதாக கருதப்படும் பாண்டிய நாட்டு ஆபத்து உதவிகள் பிராமணர்களாக இருப்பதால் அவர்களை கொள்ளக்கூடாது என அவர்களின் உடமைகளை பறித்து விட்டனர் என கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதையில் இருந்தது.

 

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலனின் மறைவிற்கு பின் அவர்களை பற்றி எதுவும் விவரிக்கவில்லை.

10

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதையில் ஊமை ராணி சுந்தர சோழனை பார்க்க வரும் நேரத்தில் ஊமை ராணி மற்றும் சுந்தர சோழன் இறந்து விடுவார்கள் என எழுதியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+