X
முகப்பு சினி தரவரிசை

5 வருட கதைக்களம் நிறைவு, முடிவுக்கு வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்

Author Sakthi Harinath | Published: Monday, October 9, 2023, 12:40 PM [IST]

5 வருட கதைக்களம் நிறைவு, முடிவுக்கு வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது என ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இதனை பற்றிய முழு விவரங்களை விரிவாக இங்கு காணலாம்.


cover image

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல மெகா தொடர் சீரியல், பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் 5 வருடங்களாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்ட இந்த சீரியல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது என சமூக வலைத்தளம் மற்றும் பல இடங்களில் ரசிகர்களால் சலசலப்பு எழுந்துள்ளது.

4 சகோதரர்கள் மற்றும் அவர்களின் வாழ்வாதாரம் என இந்த கதை தொடங்கி தற்போது 4 சகோதரர்களும் கூட்டு குடும்பமாக வாழ்வது என இந்த சீரியல் உருவாகியுள்ளது. இந்த சீரியல் பல பிரச்சனைகள் மற்றும் பல்வேறு இன்னல்களை கடந்து 5 வருடங்களாக ரசிகர்களின் கவனத்தை பெற்று பல இல்லாதாரிகள் மத்தியில் கொண்டாடப்படுகிறது.


நடிகர் சுஜாதா இந்த சீரியலில் 'தனம்' கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரை தியாகச்சுடர் என ரசிகர்கள் கிண்டலாக சமூக வலைத்தளத்தில் அழைத்துவருகின்றனர். இவரது கதாபாத்திரம் இந்த சீரியலில் விஷமுள்ள மனிதர்களுக்கும் நன்மைகளை எண்ணுபவராக வடிவமைக்கப்பட்டுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்று கொண்டாடப்பட்ட கதாபாத்திரம், முல்லை. இந்த கதாபாத்திரத்தில் விஜே சித்ரா நடித்திருந்தார். முல்லை கதாபாத்திரம் பெண்கள் மத்தியில் ஆண்கள் என அனைவராலும் கொண்டாடப்பட்டது. இந்த கதாபாத்திரத்தை ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு நடித்து அசத்தியுள்ளார், விஜே சித்ரா.


விஜே சித்ராவின் மறைவுக்கு பின், இந்த கதாபாத்திரத்தில் காவியா அறிவுமணி நடித்திருந்தார். தற்போது விஜே லாவண்யா முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.


பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில், ஜனார்த்தனனின் இளைய மருமகனான பிரஷாந்த், வரவு செலவில் ஏற்பட்ட தகறாரில் ஜனார்தனனை தாக்கி அந்த பழியை கதிர் மற்றும் ஜீவா மீது சுமத்தி தப்பி சென்றுள்ளார். இதனை அறிந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் இவரை சூழ்ச்சி செய்து பிடித்து போலீஸிடம் ஒப்படைக்கும் நொடியில் பிரஷாந்த் தப்பித்து விட்டார்.


பின் ஜனார்த்தனன் சுயநிலை திரும்ப, அவரிடம் உண்மை வாக்குமூலம் வாங்கிய போலீஸ் பிரஷாந்த்-யை உடனடியாக கைது செய்துள்ளனர். இதனை தொடர்ந்து கதிர் & ஜீவா இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடிக்கும் சரவணா விக்ரம் என்பவர் தற்போது ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 07 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். இவர் இந்த சீரியலின் தொடக்க காலத்தில் இருந்து கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் தற்போது பிக்பாஸ் வீட்டிற்கு வந்ததை பார்க்கும் போது, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவுக்கு வருகிறது என்ற எண்ணம் ரசிகர்கள் மத்தியில் பரவி இணையத்தில் பேசப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+