X
முகப்பு சினி தரவரிசை

கண்ணனை வீட்டை விட்டு வெளியேறச் சொன்ன மூர்த்திக்கு ஷாக் கொடுத்த தனம்

Author Sakthi Harinath | Published: Tuesday, June 6, 2023, 04:25 PM [IST]

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சின்னத்திரை தொடர் தற்போது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி பிரபலமாகியுள்ளது. கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா தான் இந்த கதையில் பல பிரச்சனைகளுக்கு காரணமாகவும், இந்த கதையை சுவாரஸ்யமாகவும் கொண்டு செல்கின்றனர். இந்த வார பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ வீடியோவில் நடந்த முன்னோட்டத்தை பற்றி விரிவாக பார்க்கலாம், இதோ.


cover image
1

பாண்டியன் ஸ்டோர்ஸ் - தமிழ் சின்னத்திரை பிரபல இயக்குனர்களான சிவா சேகர் மற்றும் டேவிட் சார்லீ இயக்கத்தில் உருவாகி ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மெகா தொடர். இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பல மொழிகளில் உருவாகி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த தொடரில் பல சுவாரஸ்ய சம்பவங்கள் நடந்து சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இந்த வாரம் 2023 ஜூன் முதல் வாரத்தில் வெளியான பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ அடிப்படியில் நடக்கவிருக்கும் கதை களத்தை பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.

2

கண்ணன் - ஐஸ்வர்யாவின் செயல்களால் பெரும் துன்பத்தை சந்தித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் சில பிரச்சனைகளில் சிக்கி மெதுவாக மீண்டு வருகிறது. இந்நிலையில் இவர்களின் அறியாமையால் சிறைக்கு சென்ற கதிர் ஒரு வழியாக ரிலீஸாகியுள்ளார். கண்ணன் - ஐஸ்வர்யாவை தனது இல்லத்திற்கு அழைத்து வந்த கதிர், ஒரு வேலை விஷயமாக ஒரு வாரம் வெளி ஊருக்கு சென்றுள்ளார். கண்ணன் & ஐஸ்வர்யா பாண்டியன் ஸ்டோர்ஸ் இல்லத்திற்கு வந்ததை அறியும் மூர்த்தி என்ன செய்வார் என்பதே இந்த தொடரின் இந்த வார கதை.

3

வரவுக்கு மீறி ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்ட கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா தம்பதி கடன் சுமையில் சிக்கி பெரும் அவுமானங்களை உள்ள நிலையில், வட்டிக்கு வாங்கிய பணத்தை குடுக்க வேண்டும் என்ற நிர்பந்தத்தில் உள்ளனர். இந்நிலையில் கதிர் இவர்களை தனது இல்லத்திற்கு அழைக்கிறார். இவர்கள் சிலரின் அறிவுரையை ஏற்று நடந்து கொள்ளுமாறு கேட்கிறார். சில பேச்சு வார்த்தைக்கு பின் கண்ணன் & ஐஸ்வர்யா இருவரும் கதிர் இல்லத்திற்கு வர சம்மதம் தெரிவித்துள்ளனர். இவர்களின் பேராசையால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளது.

4

கண்ணனை வீட்டில் பார்த்ததும் கோவத்தில் ஆக்ரோஷமாக திட்டுகிறார், மூர்த்தி. "இவன் எதுக்கு இங்க வந்தான், கதிர ஜெயிலுக்கு அனுப்புனது பத்தாதா?" என்று திட்டும் மூர்த்தியிடம், கதிர் தான் இவர்களை இங்கு அழைத்து வந்துள்ளார் என்று தனம் கூறுகிறார். தனத்தின் இந்த பதிலை கேட்ட மூர்த்தி அதிர்ச்சி அடைந்துள்ளார். தற்போது கதிரின் இந்த முடிவை ஆதரிப்பாரா மூர்த்தி? என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

 

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+