X
முகப்பு சினி தரவரிசை

ரீல் ஜோடியிலிருந்து ரியல் ஜோடியாக மாறிய நடிகர்கள், கோ-ஸ்டாரையே காதலித்து திருணம் செய்த சீரியல் நடிகர்கள்

Author Rajeswari Shankar | Published: Wednesday, February 26, 2025, 11:02 AM [IST]

சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், போன்ற தொலைக்காட்சி சேனல்களில் தினமும் புதுப்புது சீரியல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. பல சீரியல்களில் இருக்கும் ஜோடிகளை பார்க்கும்போது இவர்கள் உண்மையாக ஜோடியாக இருக்கக்கூடாதா என்று நமக்கே தோன்றும். அந்த அளவிற்கு அவர்களது கெமிஸ்ட்ரி ஒர்கவுட் ஆகியிருக்கும். நாம் நினைத்த மாதிரியே சில ஜோடிகள் திருமணம் செய்து சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றார்கள். அவர்கள் யார் யார் என்பதை எந்த பட்டியலில் காண்போம்.


cover image
செந்தில் மற்றும் ஸ்ரீஜா
1

ரியல் லைஃப் சீரியல் ஜோடிகள் என்று சொன்னாலே நமக்கு முதலில் ஞாபகம் வருவது செந்தில் மற்றும் ஸ்ரீஜாதான். இவர்கள் சரவணன் மீனாட்சி, மாப்பிள்ளை போன்ற தொலைக்காட்சி தொடர்களில் ஒன்றாக நடித்தனர். அப்போதே அவர்களது கெமிஸ்ட்ரி அதிரிபுதிரியாக இருக்கும். சரவணன் மீனாட்சி சீரியல் வந்த காலகட்டத்தில் அதன் தீம் மியூசிக்தான் பலரது போன் ரிங்ட்டோன் ஆக இருந்தது. இவர்களுக்கு திருமணமாகி பல வருடங்கள் ஆகியிருந்தாலும் சமீபத்தில் தான் ஒரு அழகான குழந்தை பிறந்துள்ளது. இப்போது இவர்கள் மூன்று பேரும் சந்தோஷமாக அவர்களுக்கு பிடித்த லைஃப்யை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆலியா மனசா  மற்றும்  சஞ்சீவ்
2

ஆலியா மனசா, சஞ்சீவ் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரில் ஒன்றாக நடித்தனர். அந்த தொடரில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இவர்களுக்குள் காதல் மலர்ந்தது. இவர்களது காதல் கதை ஃபேன்ஸ் எல்லாருக்கும் நல்லா தெரிந்த கதைதான். இவர்களது காதலுக்கு சஞ்சய் வீட்டில் கிரீன் சிக்னல் கொடுத்தாலும் ஆலியா வீட்டில் யாரும் இவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆலியா சஞ்சீவ்வை வீட்டை விட்டு வெளியே வந்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இப்போது இரண்டு அழகான குழந்தைகள் உள்ளன.

சித்து மற்றும் ஸ்ரேயா
3

சித்துவும் ஸ்ரேயாவும் எல்லாருக்கும் மிகவும் பிடித்த ஜோடி. இவர்களது க்யூட்டான வீடியோக்கள் அவபோது இணையதளத்தில் வைரலாகி ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமையும். இவர்கள் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான திருமணம் என்னும் தொடரில் இணைந்து நடித்தனர். அந்த சீரியல் பார்ப்போருக்கே இவர்கள் ரீல் ஜோடியா ரியல் ஜோடியா என்று சந்தேகம் வரும் அளவிற்கு அவர்களது கெமிஸ்ட்ரி பயங்கரமாக ஒர்கவுட் ஆகி இருக்கும். பின்னர் இந்த ஜோடி அவர்களது திருமண செய்தியை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். இப்போது இருவரும் அவரது ட்ரீம் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 

அன்வர் மற்றும் சமீரா
4

விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு தொடரின் மூலம் அன்வர் மற்றும் சமீராவின் காதல் கதையும் தொடங்கியது. இவர்களது திருமண செய்தி இவர்களது ரசிகர்களுக்கு ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியை கொடுத்தது. இவர்கள் சீரியலில் நடிப்பதை விட்டுவிட்டு அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகின்றனர். சமீரா அவர்களது குழந்தையுடன் என்ஜாய் செய்து வருகின்றார். அன்வரும் அவரது பிசினஸ்யில் கவனம் செலுத்தி வருகின்றார். இவர்களுக்கு அயான் என்று ஒரு அழகான மகன் உள்ளார். 

சேத்தன் மற்றும் தேவதர்ஷினி
5

இப்போது சீரியல் நடிகர்கள் அவருடன் நடித்த நடிகர்களை திருமணம் செய்து கொள்வது ரொம்ப சாதாரணமான விஷயம்தான். இது எல்லாத்துக்கும் விதைபோட்டது சேத்தன் மற்றும் தேவதர்ஷினி தம்பதியர் தான். இவர்கள் இரண்டு பேரும் பல சீரியல்கள் மற்றும் திரைப்படங்கள் ஒன்றாக நடித்துள்ளனர். இவர்க்ளிக்கிடையியே மர்ம தேசம் என்னும் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதுதான்  காதல் உருவானது. திருமணமும் செய்துகொண்டனர் பின்னால் இவர் அத்திப்பூக்கள் போன்ற சீரியல்களில் ஒன்றாக சேர்ந்து நடித்தனர். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார் அவரும் சின்னத்திரையில் மற்றும் வெள்ளி திரையில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+