ஆண் பாவம் பொல்லாதது தமிழ் காதல் கற்பனை நகைச்சுவை திரைப்படம். இப்படத்தை கலையரசன் தங்கவேல் இயக்கியுள்ளார். திரைக்கதையை இயக்குநர் மற்றும் சிவக்குமார் முருகேசன் இணைந்து எழுதியுள்ளனர். படத்தை வேட்டைக்காரன்பட்டி S. சக்திவேல் தயாரித்துள்ளார்.
இசையை சித்துகுமார் அமைத்துள்ளார், மேலும் எடிட்டிங்கை வருண் மேற்கொண்டுள்ளார். இப்படம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் ஆஹா தமிழ் ஓடிடி தளங்களில் வெளியானது.
கதை
கதை, நாயகன் மற்றும் நாயகியின் திருமணத்துடன் தொடங்குகிறது. ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக இருந்த அவர்களின் வாழ்க்கையில் தனிப்பட்ட மனநிலைகள், எண்ணக்கேடுகள் காரணமாக பிரச்சனைகள் உருவாகின்றன. இதன் விளைவாக இருவரும் விவாகரத்திற்காக குடும்ப நீதிமன்றத்தை அணுகுகின்றனர்.
ஆனால் நாயகன் இன்னும் இணைந்து வாழ விரும்புகிறேன் என தெரிவிப்பதால், விவாகரத்து நடைமுறையில் சிக்கல் ஏற்படுகிறது. இதை சமாளிக்க, நாயகியின் வழக்குரைஞர் நாயகனுக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்.
இந்திய சட்டப்படி, கணவனின் சொத்தில் பாதியும், அவரின் சம்பளத்தில் பாதியும் மனைவிக்கு செல்ல வேண்டிய நிலையும் படத்தில் கூறப்படுகிறது. சொத்துக்காக ஏற்படும் திருமண முறிவுகளையும் திரைக்கதை நகைச்சுவையான கோட்டில் எடுத்துக்காட்டுகிறது.
படத்தில் நீதிபதி வேடத்தில் ஒரு திருநங்கை நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
“பெண் உரிமை என்பது ஆண் உரிமையை பறிப்பதோ மீறுவதோ அல்ல; இருவரும் விட்டுக் கொடுத்து வாழ்வதே ஒரு திருமணத்தின் அடிப்படை” என நாயகனின் வழக்குரைஞர் கூறும் இறுதி வாதம், நாயகியின் மனதை மாற்றுகிறது.
இறுதியில், இருவரும் விவாகரத்தை கைவிட்டு மீண்டும் ஒன்றிணைந்து வாழ முடிவு செய்கின்றனர்.
வெளியீட்டு தேதி
ஆண் பாவம் பொல்லாதது திரைப்படம் 31 அக்டோபர் 2025 அன்று திரையரங்குகளில் வெளியானது.