அஞ்சல இயக்குனர் தங்கம் சரவணன் இயக்கத்தில் விமல் மற்றும் நந்திதா நடிப்பில் உருவாகிவரும் காதல் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு நா முத்துகுமார் பாடல் வரிகளை எழுத, இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைத்துள்ளார்.
கதை :
நூறு ஆண்டு பழமையான டீ கடைதான் அஞ்சல. பழமையான கடை என்பதாலும், அரசின் சுயநலத்தினாலும் அக்ககடைக்கு இடையூர் வருகின்றது.
அந்த இடையூரிலிருந்து அக்கடையினை மீட்க அந்த கடையின் மூன்றாம் வாரிசான பசுபதி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறார். வழக்கு நடந்துகொண்டிருக்கும் சமயத்தில் அஞ்சல கடைக்கு மற்றுமொரு ஆபத்து வருகின்றது.
இதனால், அக்கடைக்கு ஆதரவாளராகவும், வாடிக்கையாளராகவும் துணை நின்ற விமல் மற்றும் அவரது நண்பர்களின் வாழ்கையே திசைமாறிப்போக, அனைவரின் பிரச்சனைகளுக்கும் இந்த அஞ்சல கடைதான் காரணமென்று அனைவரும் கடையினை புறக்கணிக்கின்றனர்.
இறுதியில் யாருடைய ஆதரவும் இன்றி நிராயுதபாணியாக நிற்கும் பசுபதிக்கு என்ன ஆயிற்று? அந்த அஞ்சல கடைக்கு வந்த பிரச்சனைதான் என்ன? இறுதியில் கடையின் நிலைமை என்ன ஆயிற்று? கடை மீட்கப்பட்டதா? இல்லையா ? என்ற பல கேள்விகளுக்கான விடையே அஞ்சல திரைப்படத்தின் மீதிக்கதை