இறுதிச்சுற்று இயக்குனர் சுதா கொங்கரா பிரசாத் இயக்கத்தில் மாதவன், ரித்திகா சிங், ராதா ரவி, நாசர் மற்றும் பலர் நடித்துள்ள இத்திரைப்படம் குத்துசன்டையை மையமாக கொண்ட அதிரடித் திரைப்படமாகும். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.
கதை :
மும்பையில் பாக்ஸராக இருக்கும் மாதவன் குத்துசண்டையில் சாதிக்க நினைத்து ஒரு போட்டியில் தோற்றுப் போகிறார். அதனால் அவருடைய மனைவியும் பிரிந்து செல்கிறார். பின் அதே இடத்தில் ஒரு குத்துசண்டை பயிற்றுனராக பணியாற்றிவருகின்ற அவருக்கு, அங்குள்ள சிலரின் சூழ்ச்சியால் அவப்பெயர் எடுத்து இடம் மாறுகிறார். சென்னையில் ஒரு பாக்சிங் சாம்பியனை உருவாக்கிக் காட்டுகிறேன் என்ற சவாலுடன் சென்னைக்கு வருகிறார். அச்சமயம் ரித்திகாவினை ஒரு போட்டியில் சந்திக்கும் அவர் ரித்திகாவினை எப்படியாவது பாக்சிங் பயிற்சி அளித்து தனது லட்சியத்தை நிறைவேற்றிக் கொள்ள பார்க்கிறார்.
லோக்கலில் மீன் விற்கும் பெண்ணாக வரும் ரித்திகாவிற்கு ஆரம்பத்தில் அவரை சம்மதிக்க வைத்து பணம் கொடுத்து பயிற்சி அளிக்கின்றார் மாதவன். இடையில் பல இடையூர்கள், தோல்விகள், சறுக்கல்கள் ஒரு கட்டத்தில் ரித்திகாவின் மீது இருந்த நம்பிக்கை இழந்து துரத்துகிறார். அதன் பின் என்ன ஆனது? ரித்திகா மறுபடியும் மாதவனுடன் இணைந்தாரா..? மாதவன் அக்குத்து சண்டையின் இறுதி போட்டியில் வெற்றி பெற்று தனது சவாலை நிறைவேற்றினரா? என்பதே மீதிக்கதை.