twitter
    Tamil»Movies»Jilla»Story

    ஜில்லா கதை

    ஜில்லா 2014ல் திரைக்கு வந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும். மோகன்லால், விஜய், காஜல் அகர்வால், பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் நடித்து வெளிவந்த இப்படத்திற்கு, டி. இமான் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தை எழுதி இயக்கியவர் இரா.தி நேசன் ஆவார். இப்படம் 2014 ஜனவரி 10 ஆம் தேதி தைப்பொங்கல் வெளியீடாக வெளிவந்தது.

    கதை 

    மோகன்லால் (சிவா) மதுரையின் பெரிய தாதா (குற்றச்செயல் புரிபவர்களின் தலைவர்) விஜய்யின் (சக்தி) அப்பா அவரிடம் வேலை செய்கிறார். மோகன்லாலின் மனைவியை பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது மோகன்லால் குடும்பத்தை கொல்ல அவரின் எதிரிகள் முயலும் போது விஜய்யின் அப்பா காவல்துறை அதிகாரி ஒருவரால் கொல்லப்படுகிறார். மோகன்லால் விஜய்யை தன் குழந்தையாக வளர்க்கிறார். அதை பார்த்ததிலிருந்து விஜய்க்கு காவல்துறை என்றாலே வெறுப்பு. அவர் சாலையில் பார்த்த பெண்ணின் (காஜல் அகர்வால்) மீது காதல் கொள்கிறார். 

    ஒரு காவல்துறை அதிகாரி. மோகன்லாலை காவல்துறை அதிகாரி ஒருவர் அசிங்கப்படுத்தி விடுவதால் அவர் விஜயை காவல்துறை அதிகாரி ஆக்குகிறார். விஜய் மோகன்லாலின் குற்றச்செயல்களுக்கு உதவுகிறார். ஓர் குற்றச்செயலின் போது குழந்தைகள் நிறைய பேர் இறந்ததை தொடர்ந்து விஜய் குற்றச்செயல்களுக்கு எதிராக திரும்புகிறார். மோகன்லாலை குற்றச்செயல்கள் புரியக்கூடாது என்கிறார். அதனால் இருவருக்கும் மோதல் வருகிறது. 

    மோகன்லாலின் கடைகளை தீவைத்து அழித்து அதை விஜய்யின் மீது ஓர் கும்பல் பழி போடுகிறது. அவர்களால் மோகன்லாலின் சொந்த மகன் கொல்லப்படுகிறார். அதை விஜய்யின் மீது சுமத்துகிறார்கள். அதை மோகன்லால் நம்பினாரா, விஜய் மோகன்லாலுடன் இணைந்தாரா? எப்படி உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து விஜய் அழிக்கிறார் என்பதை இயக்குநர் விறுவிறுப்பாக சொல்லியுள்ளார்.
    **Note:Hey! Would you like to share the story of the movie ஜில்லா with us? Please send it to us ([email protected]).