ஒரு போதை கடத்தல் கும்பல் சென்னைக்குள் பெரிய அளவில் போதை மருந்துகளை கடத்த முயற்சி செய்கிறது. இதனை நேர்மையான காவல் அதிகாரி நரேன் தடுத்து அந்த கடத்தல் வாகனத்தை சீஸ் செய்கிறார். சுமார் 850 கோடி மதிப்பிளான 900 கிலோ போதை மருந்துகளை சீஸ் செய்த போலீஸ் அதிகாரி நரேன் மற்றும் அவருக்கு உதவி செய்தவரை கொன்று, போதை மருந்தினை திருப்பி கொண்டு செல்ல கடத்தல் காரர்கள் போராடுகிறார்கள்.
அதே சமயத்தில் கடத்தல் காரர்களின் சில விஷமிகளால் காவல் துறையில் உள்ள சில முக்கிய அதிகாரிகள் அனைவரும் போதை மருந்துகள் கலக்கிய பாகனத்தை தெரியாமல் பருகி உயிருக்கு போராடுகின்றனர்.
அந்த இடத்தில் ஜெயில் ஆயுள் தண்டனை அனுபவித்து வெளியாகும் கார்த்தியை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து வாகனத்தில் வைத்திருக்கிறது போலீஸ். வாகனத்தில் இருக்கும் கார்த்தியிடம் உதவி கேட்டகிறார் நரேன். சில பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் காவலருக்கு உதவி செய்ய ஒப்புக்கொள்கிறார் நாயகன் கார்த்தி.
போதை மருந்துகளால் பாதிக்கப்பட்ட காவல் அதிகாரிகளை ஒரு லாரியில் ஏற்றி அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார் கார்த்தி, நரேன் மற்றும் தீணா.
இந்த சமயத்தில் இவர்கள் சீஸ் செய்த போதை மருந்துகளை பதிக்கு வைத்திருந்த காவல் நிலையத்தை சுற்றி வலைக்கிறார்கள் கடத்தல் ரௌடிகள். இந்த நேரத்தில் சில ரௌடிகள் நரேன் மற்றும் அவருக்கு உதவி செய்த காவலர்களை கொள்ள முயற்சி செய்கிறார்கள்.
இறுதிவரை நாயகன் கார்த்தி காவலர்களை காப்பாற்ற போராடுகிறார். எந்த ஒரு சம்மந்தமும் இல்லாமல் இந்த போராட்டத்திற்குள் வரும் நாயகன் கார்த்தி கடத்தல் காரர்களின் சூழ்ச்சியிலிருந்து காவலர்களை காப்பாற்றுகிறார். இவரின் இந்த செயலினால் கடத்தல் காரர்களின் கோபம் கார்த்தியின் பக்கம் திரும்புகிறது.
இதோடு இந்த படத்தின் கதையை முடிக்கிறார் இயக்குனர். இக்கதை தொடர்ச்சியாக கைதி இரண்டாம் பாகமாக உருவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.