கனா இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் மற்றும் பலர் நடித்த அதிரடி மற்றும் விளையாட்டு துறை சார்ந்த திரைப்படம். இத்திரைப்படத்தின் மூலம், நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராகவும், படகராக பணியாற்றியுள்ளார். கபாலி புகழ் நெருப்புடா ஆசிரியர் மற்றும் பாடகர் அருண்ராஜா காமராஜ் இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார். இப்படத்திற்கு திபு நின்னான் தாமஸ் இசையமைத்துள்ளார்.
கிரிக்கெட் வீராங்கனை ஆகவேண்டும் என்னும் ஆசையுடன் இருக்கும் ஒரு கிராமத்து பெண் எப்படி தடைகளை மீறி சர்வதேச கிரிக்கெட்போட்டிக்கு சென்றார் என்றும் மற்றொரு பக்கம் இன்று நம் நாட்டில் விவசாயமும், விவசாயின் கஷ்டங்களை வெளிப்படையாக எடுத்துரைக்கிறார் இயக்குனர்.
கதை
திருச்சி அருகே உள்ள குளித்தலையை சேர்ந்தவர் விவசாயி முருகேசன் (சத்யராஜ்). இவர் உயிராக நினைக்கும் இரண்டு விஷயம் விவசாயமும், கிரிக்கெட்டும். ஒரு உலகக்கோப்பை போட்டியில் இந்தியா தோற்றுவிட, சோகத்தில் மூழ்குகிறார் முருகேசன். சிறுவயதில் தனது தந்தை முதல் முறையாக அழுவதைப் பார்க்கும் மகள் கௌசல்யாவுக்கு (ஐஸ்வர்யா ராஜேஷ்), இந்தியாவுக்காக தான் கிரிக்கெட் விளையாடி, ஜெயித்து தந்தையின் அழுகையை சிரிப்பாக மாற்ற வேண்டும் என மனதிற்குள் சபதம் ஏற்கிறார். இந்த ஆசை ஒரு கட்டத்தில் வெறியாக மாறிவிடுகிறது. பொம்பள பிள்ளைய கிரிக்கெட் விளையாட அனுமதிச்சதுக்காக, ஊரே சேர்ந்து முருகேசனை ஏசுகிறது. இந்த தடைகளை எல்லாம் தாண்டி, கௌசல்யா முருகேசன் அதற்காக அவர் சந்தித்த பிரச்சனைகள், அனுபவித்த அவமானங்கள் வெற்றி தோல்விகளை கூறுவதுதான் இந்த படத்தின் மீதிக்கதை.
ஒரு பக்கம் மகளிர் கிரிக்கெட், மறுபக்கம் விவசாயம் என இருகோடுகளில் பயணிக்கிறது கதை. ஒரு கிரிக்கெட் படத்தில் விவசாயத்தை புகுத்தியது ஏன்? என்று மனதில் எழும் கேள்விக்கு இறுதியில் அழுத்தமாக விடை கூறுகிறார் இயக்குனர்.
ஆனால் குற்றவாளிகளான 4 இளைஞர்களையும் காப்பாற்ற உயர் அதிகாரியான சம்பத் முயற்சிக்கிறார். சம்பத்தின் சூழ்ச்சியால் ஜெயம் ரவியால் குற்றவாளிகளுக்கு எதிரான தடையங்களை சேகரிக்க முடியவில்லை . அதனால் அவர் வேலையை இழக்கிறார். மேலும் அவரது குடும்பத்தினர் கொலை செய்யப்படுகிறார்கள்.
எந்த அதிகாரமும் இல்லாமல் தனது தனி முயற்சியால் எப்படி ஜெயம் ரவி வில்லன்களை பழிவாங்குகிறார் என்பதே மீதிக் கதை.