யான் 2014-ம் ஆண்டு வெளிவந்த சண்டை கலந்த காதல் திரைப்படம். இப்படத்தின் கதாநாயகனாக ஜீவா மற்றும் கதாநாயகியாக துளசி நாயர் நடித்துள்ளனர். இப்படத்தின் இயக்குனர் ரவி கே.சந்திரன். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் ஹாரிஸ் ஜெயராஜ். மற்றும் இப்படத்தை தயாரித்துள்ளனர் எல்ரெட் குமார், மற்றும் ஜெயராமன்.
கதை
யான் திரைப்படம் படம் மும்பையில் ஆரம்பிக்கிறது. சுல்தான் மாலிக் ஷா (நவாப் ஷா ) என்ற மோசமான குற்றவாளியை காவல் துறை ஆணையர் அன்வர் (ஜெயப்பிரகாஷ்) என்கவுண்டர் செய்கிறார். சந்துரு (ஜீவா) வேலையில்லாத நபராக வருகிறார். ஒரு நாள் சந்துரு, ஸ்ரீலா (துளசி நாயர்)-வை என்கவுண்டர் நடந்த இடத்திலிருந்து அழைத்துச்சென்று அவரது உயிரை காப்பாற்றுகிறார். பின்னர் இருவரும் காதல்வாய்ப்படுகின்றனர். ஆனால் சந்துருவுக்கு வேலையில்லாத காரணத்தினால், அவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார் ஸ்ரீலாவின் தந்தை (நாசர்). அதனால் சந்துரு பசிலிஸ்தான் என்ற ஒரு கண்டிப்பான இஸ்லாமிய நாட்டில் ஹரிதாஸிடம் பயண முகவராக வேலைக்கு சேர்கிறார்.
சந்துரு, அஸ்லாம் என்றவருடன் பசிலிஸ்தான் விமானநிலையத்தில் போதை பொருளை எடுத்துசென்றதற்காக கைதுசெய்கின்றனர். தமிழ் வழக்கறிஞரின் உதவியுடன் ஜாமீனில் அழைத்துச்செல்வதாக சின்னா (தம்பி ராம்மையா) கூறுகிறார். ஆனால் அதற்கு முன் சந்துரு சிறையிலிருந்து தப்பிக்கிறார். அதே சமயம் ரகீம், மாலிக்கின் போலியாக என்கவுண்டரில் சுடப்பட்டவர். மாலிக் சந்துருவையும், ஸ்ரீலாவையும் கொல்ல அவர்களை பின்தொடர்கிறார்.
இறுதியில் சந்துரு எவ்வாறு ஸ்ரீலாவுடன் பசிலிஸ்தானிலிருந்து தப்பித்தாரா?, இல்லையா? அவர்களுக்கு என்ன நேர்ந்தது? என்பது உச்சக்கட்டம்.