உதயதாராவை விரட்டிய குரங்கு! மலையாள மந்தாரை உதயதாரா, சமீபத்தில் குற்றாலத்தில் குரங்கு ஒன்றையும், ஐயப்பபக்தர்களையும் அலற வைத்துள்ளார்.கண்ணும் கண்ணும் என்ற பெயரில் உருவாகி வரும் படத்தில் பிரசன்னாவும்,உதயதாராவும் நடித்து வருகின்றனர். வித்தியாசமான கதைப் பின்னணியல்இப்படத்தை இயக்கி வருகிறார் மாரிமுத்து என்ற புதிய இயக்குனர்.படத்தின் 90 சதவீதக் காட்சிகளை முடித்து விட்ட மாரிமுத்து சமீபத்தில் குற்றாலத்தில்சில காட்சிகளை படமாக்கினார். இதற்காக உதயதாரா, பிரசன்னா உள்ளிட்ட படக்குழுவினர் குற்றாலத்தில் முகாமிட்டிருந்தனர்.படப்பிடிப்பு நடந்த போது உதயதாராவை ஒரு குரங்கு துரத்தத் தொடங்கியுள்ளதாம்.பயந்து போன உதயாதார அங்கும் இங்கும் ஓடியுள்ளார். படப்பிடிப்புக் குழுவில்இருந்தவர்கள் குரங்குப் பிடியிலிருந்து உதயதாராவை மீட்டு பத்திரமான இடத்திற்குஅழைத்துச் சென்றனராம். உதயதாரவை குரங்கு விரட்டியதற்கு அவர் போட்டிருந்த டிரஸ்தான் காரணமாம்.பளிச்சிடும் வண்ணத்தில் இருந்த உதயதாராவைப் பார்த்து குரங்கு உற்சாகமாகிவிட்டதாம். அதனால் தான் உதயதாரவை ஓட விட்டதாக கருதிய இயக்குனர்உதயதாராவின் காஸ்ட்யூமை மாற்றி ஷூட்டிங்கைத் தொடர்ந்தாராம்.படத்தில் புக் ஆன போதே ரொம்பக் கவர்ச்சியான உடைகளை அணிய மாட்டேன்என்று கூறியிருந்தாராம் உதயதாரா. இதனால் கவர்ச்சி குறைச்சலான டிரஸ்தான்அவருக்குக் கொடுக்கப்பட்டது. அப்படியும் கூட உதயதாராவின் கலர்புல டிரஸ்ஸைபார்த்து குரங்கு எகிறியதால், மாரிமுத்து குழம்பிப் போய் மங்கலான டிரஸ்ஸைக்கொடுத்து மீதக் காட்சிகளை முடித்தாராம்.இதேபோல இன்னொரு சுவாரஸ்யமும் நடந்துள்ளது. படத்தில் பிண ஊர்வலம்நடப்பது போல ஒரு காட்சி. பிணம் போல ஒரு துணை நடிகர் நடிக்க இறுதி ஊர்வலம்நடப்பது போல காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தனர்.அப்போது அந்தப் பக்கம் சில ஐயப்ப பக்தர்கள் மாலை போட்டு ஊர்வலமாக வந்துகொண்டிருந்தனராம். பிண ஊர்வலக்காட்சியைப் பார்த்த அவர்கள், அபசகுனமாக பிண ஊர்வலம்வருகிறதே என்று பயந்து மறை விடத்தில் போய் நின்று கொண்டார்களாம். பக்தர்கள்பம்முவதைப் பார்த்த படக் குழுவினர் அவர்களிடம் போய் இது ஷூட்டிங் தான்,பயப்பட வேண்டாம் என்று விளக்கினராம்.அதன் பிறகு சாமிகள் சஞ்சலத்தை விட்டு விட்டு தொடர்ந்து நடந்தார்களாம். அடடா,ஒரு ஷூட்டிங் நடத்த இம்புட்டு சங்கடங்களா?
மலையாள மந்தாரை உதயதாரா, சமீபத்தில் குற்றாலத்தில் குரங்கு ஒன்றையும், ஐயப்பபக்தர்களையும் அலற வைத்துள்ளார்.
கண்ணும் கண்ணும் என்ற பெயரில் உருவாகி வரும் படத்தில் பிரசன்னாவும்,உதயதாராவும் நடித்து வருகின்றனர். வித்தியாசமான கதைப் பின்னணியல்இப்படத்தை இயக்கி வருகிறார் மாரிமுத்து என்ற புதிய இயக்குனர்.
படத்தின் 90 சதவீதக் காட்சிகளை முடித்து விட்ட மாரிமுத்து சமீபத்தில் குற்றாலத்தில்சில காட்சிகளை படமாக்கினார். இதற்காக உதயதாரா, பிரசன்னா உள்ளிட்ட படக்குழுவினர் குற்றாலத்தில் முகாமிட்டிருந்தனர்.
படப்பிடிப்பு நடந்த போது உதயதாராவை ஒரு குரங்கு துரத்தத் தொடங்கியுள்ளதாம்.பயந்து போன உதயாதார அங்கும் இங்கும் ஓடியுள்ளார். படப்பிடிப்புக் குழுவில்இருந்தவர்கள் குரங்குப் பிடியிலிருந்து உதயதாராவை மீட்டு பத்திரமான இடத்திற்குஅழைத்துச் சென்றனராம்.
உதயதாரவை குரங்கு விரட்டியதற்கு அவர் போட்டிருந்த டிரஸ்தான் காரணமாம்.பளிச்சிடும் வண்ணத்தில் இருந்த உதயதாராவைப் பார்த்து குரங்கு உற்சாகமாகிவிட்டதாம். அதனால் தான் உதயதாரவை ஓட விட்டதாக கருதிய இயக்குனர்உதயதாராவின் காஸ்ட்யூமை மாற்றி ஷூட்டிங்கைத் தொடர்ந்தாராம்.
படத்தில் புக் ஆன போதே ரொம்பக் கவர்ச்சியான உடைகளை அணிய மாட்டேன்என்று கூறியிருந்தாராம் உதயதாரா. இதனால் கவர்ச்சி குறைச்சலான டிரஸ்தான்அவருக்குக் கொடுக்கப்பட்டது. அப்படியும் கூட உதயதாராவின் கலர்புல டிரஸ்ஸைபார்த்து குரங்கு எகிறியதால், மாரிமுத்து குழம்பிப் போய் மங்கலான டிரஸ்ஸைக்கொடுத்து மீதக் காட்சிகளை முடித்தாராம்.
இதேபோல இன்னொரு சுவாரஸ்யமும் நடந்துள்ளது. படத்தில் பிண ஊர்வலம்நடப்பது போல ஒரு காட்சி. பிணம் போல ஒரு துணை நடிகர் நடிக்க இறுதி ஊர்வலம்நடப்பது போல காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தனர்.அப்போது அந்தப் பக்கம் சில ஐயப்ப பக்தர்கள் மாலை போட்டு ஊர்வலமாக வந்துகொண்டிருந்தனராம்.
பிண ஊர்வலக்காட்சியைப் பார்த்த அவர்கள், அபசகுனமாக பிண ஊர்வலம்வருகிறதே என்று பயந்து மறை விடத்தில் போய் நின்று கொண்டார்களாம். பக்தர்கள்பம்முவதைப் பார்த்த படக் குழுவினர் அவர்களிடம் போய் இது ஷூட்டிங் தான்,பயப்பட வேண்டாம் என்று விளக்கினராம்.
அதன் பிறகு சாமிகள் சஞ்சலத்தை விட்டு விட்டு தொடர்ந்து நடந்தார்களாம். அடடா,ஒரு ஷூட்டிங் நடத்த இம்புட்டு சங்கடங்களா?


Click it and Unblock the Notifications











