கருடன் - கருடன் - கதை
தேனி மாவட்டம் கோம்பை என்னும் கிராமத்தில் உயிர் நண்பர்களாக வளர்கின்றனர், ஆதி (சசிகுமார்) & கர்ணா (உன்னி முகுந்தன்). இவர்கள் இணைந்து செங்கல் சூளை தொழில் செய்து வருகின்றனர். கோம்பையில் உள்ள ஒரு அம்மன் கோவில் நிலத்தை அபகரிக்க நினைக்கும் அரசியல்வாதி ஆர் வி உதயகுமார் (சின்ன கவுண்டர் பட இயக்குனர்), மைம் கோபி மற்றும் போலீஸ் அதிகாரி சமுத்திரக்கனி உதவியுடன் தனது திட்டத்தை நகர்த்துகிறார்.
கோவில் பற்றிய அணைந்து பத்திர சான்றிதழ் முழுவதையும் வடிவுக்கரசி குடும்பம் பராமரித்து வருகிறது. இப்படத்தின் நாயகன் சூரி 'சொக்கன்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கர்ணன் (உன்னி முகுந்தன்) சிறுவயதில் ஒரு ஆபத்தில் இருந்து சூரி காப்பாற்ற, அந்த நொடி முதல் சூரி கர்ணனின் நண்பனாகவும், பாதுகாவலனாக மாறுகிறார். மிகுந்த விஸ்வாசத்துடன் இருக்கும் சூரி, கர்ணன்யை பல திசைகளில் இருந்து பாதுகாத்து வருகிறார்.
காலபோக்கில் சூரி - சசி குமார் - உன்னி முகுந்தன் மூவரும் நண்பர்களாக மாறுகின்றனர். இவர்களை தாண்டி கோவில் நிலத்தை அபகரிக்க முடியாமல் இருக்கும் அரசியல்வாதி, சூழ்ச்சி செய்து உன்னி முகுந்தன் - சசி குமார் இடையே இருக்கும் நட்பை உடைக்க திட்டமிட்டு, நண்பர்களை எதிரிகளாக மாற்றுகின்றார்.
தனது மனைவி தூண்டுததால் நண்பன் துரோகியாக மாறுகிறார், உன்னி முகுந்தன். இவர் செய்யும் தவறுகளுக்கு சூரி என்ன செய்கிறார் என்பதே இப்படத்தின் கதை.
தவறென அறிந்தும் உன்னி முகுந்தன் பக்கம் நின்றாரா? சூரி. இல்லை உன்னி முகுந்தனை எதிர்த்து நிற்கிறாரா? என்பதே இப்படத்தின் சுவாரஸ்ய திரைக்கதை.