X
முகப்பு சினி தரவரிசை

மீண்டும் சிக்கல்: சிலம்பரசன் படத்திற்கு வழக்கு போட்ட பெரிய பட தயாரிப்பாளர், படப்பிடிப்பு நடக்குமா?

Author Sakthi Harinath | Published: Thursday, June 8, 2023, 02:34 PM [IST]

சிலம்பரசன் தமிழ் சினிமாவில் ஆஸ்தான நடிகர். இவர் பாடகர், இசையமைப்பாளர் என பன்முகங்களில் தமிழ் திரையுலகில் பணியாற்றி வருகிறார். பல பிரச்சனைகளுக்கு பின் ஹிட் படங்களில் நடித்து வந்துள்ள இவருக்கு மீண்டும் சிக்கல் தொடங்கியுள்ளது. நடிகர் சிலம்பரசன் படத்திற்கு பிரபல தயாரிப்பாளர் வழக்கு போட்டுள்ளார், இதை பற்றிய முழு விவரங்கள் இதோ.


cover image
எஸ்.டி.ஆர் 48

சிலம்பரசன் (சிம்பு, எஸ் டி ஆர்) என்று தமிழ் சினிமாவில் அழைக்கப்படுபவர். இவர் தமிழ் திரையுலகில் ஆஸ்தான நடிகர் மற்றும் பன்முகங்களில் பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் பிரபலம் ஆவார். தற்போது சிலம்பரசன் உலகநாயகன் 'கமல்ஹாசன்' தயாரிப்பில் 'எஸ் டி ஆர் 48' திரைப்படத்தில் நடிக்க தாயராகி வருகிறார். இப்படத்தினை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார்.

 

பிரமாண்ட தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு முதற்கட்ட பணிகள் நடந்து வருகிறது. விரைவில் இத்திரைப்படத்தின் தயாரிப்பு பணிகள் தொடங்க இருக்கிறது என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த நிலையில் தீடிரென இப்படத்தின் படபிடிப்பிக்கு தடங்கல் ஏற்பட்டுள்ளது.

வெந்து தணிந்தது காடு (பார்ட் 01 - தி கிண்ட்லிங்)

இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் சிலம்பரசன் நடிப்பில் உருவான திரைப்படம், வெந்து தணிந்தது காடு. இத்திரைப்படம் 2022ம் ஆண்டு வெளியாகி பெரிய அழகில் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு ஹிட் அடித்துள்ளது. இப்படத்தின் வெற்றி விழாவில் இப்பட தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ், இப்பட நாயகன் சிலம்பரசனுக்கு 1 கோடி மதிப்பில் ஒரு கார் வாங்கி பரிசளித்தார்.

 

நடிகர் சிலம்பரசனின் நெருக்கமான தயாரிப்பாளராக இருந்துவந்துள்ள ஐசரி கே கணேஷ் தற்போது சிலம்பரசன் படத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்து உள்ளார்.

மாநாடு

கொரோன காலகட்டங்களில் பல போராட்டங்களுக்கு பிறகு சிலம்பரசனின் மாநாடு திரைப்படம் உருவானது. மாநாடு படத்தினை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்க, இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். மாநாடு படம் வெளியாகி தமிழ் சினிமாவில் 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து பிரமாண்ட வெற்றி பெற்றது.

 

மாநாடு படத்தின் படப்பிடிப்பு பிரச்சனையில் தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் நடிகர் சிலம்பரசனுக்கு ஆதரவாக நின்று சுரேஷ் காமாட்சியிடம் பேச்சுவார்த்தைகள் நடத்தினர். இறுதியில் சிலம்பரசன் ஐசரி கே கணேஷ்-க்கு 3 திரைப்படங்கள் நடித்து தருகிறேன் என ஒப்பந்தம் செய்தார்.

எஸ்.டி.ஆர் 48

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் அறிமுகமாகி பெரிய அளவில் பிரபலமானவர், தேசிங்கு பெரியசாமி. இவர் இப்படத்தினை தொடர்ந்து ரஜினியின் படத்தை இயக்க இருந்தார். இறுதியில் ரஜினி திரைப்படம் கைவிடப்பட்டு, சிலம்பரசன் படத்தினை இயக்க தயாராக இருந்தார்.

 

சிலம்பரசன் எனக்கு 3 படங்கள் நடித்து தர வேண்டும். இரு படங்கள் முடித்துள்ள நிலையில், மூன்றாவது படம் நடித்து கொடுக்க வேண்டும், அதற்கு பின் நீங்கள் உங்கள் படத்தினை தொடங்கலாம் என தயாரிப்பு கமுட்டியின் புகார் அளித்து வழக்கு தொடர்ந்துள்ளார். இதனால் சிலம்பரசனின் 'எஸ் டி ஆர் 48' திரைப்படத்திற்கு சிக்கல் தொடங்கியுள்ளது.

வெந்து தணிந்தது காடு (பார்ட் 01 - தி கிண்ட்லிங்)

வெந்து தணிந்தது காடு திரைப்படம் இரு பாகங்களாக உருவாக்க திட்டமிட்டுளனர், படக்குழுவினர். முதல் பாகம் முடிந்துள்ள நிலையில் இரண்டாம் பாகத்தை நடித்து தரவேண்டும் என்கிறார், ஐசரி கே கணேஷ். ஆனால் சிலம்பரசன் வெந்து தணிந்தது காடு இரண்டாம் பாகத்தை நடிக்க விருப்பம் இல்லை என்கிறார். இப்படத்திற்கு பதிலாக வேறு ஒரு படத்தினை உங்களுக்கு நடித்து தருகிறேன் என்றுள்ளார், சிலம்பரசன்.

 

இதற்கு சம்மதம் தெரிவித்த ஐசரி கே கணேஷ் சிலம்பரசனின் அடுத்த படத்திற்கு பல இயக்குனர்களிடம் பேசி வருகிறார். விரைவில் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் சிலம்பரசன் ஒரு திரைப்படம் நடிக்க வென்றும் என தமிழக தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளது. இல்லையென்றால் சிலம்பரசன் நடிக்கும் படங்களுக்கு தடை விதிக்க திட்டமிட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+