X
முகப்பு சினி தரவரிசை

Pandian Stores 2: கணவருக்காக சீறிப்பாயும் ராஜி... அதிர்ச்சியில் கதிர், அசத்தலான ரொமான்ஸ்

Author Sakthi Harinath | Updated: Wednesday, May 8, 2024, 12:24 AM [IST]

Pandian Stores 2: கணவருக்காக சீறிப்பாயும் ராஜி... அதிர்ச்சியில் கதிர், அசத்தலான ரொமான்ஸ் - முழு தகவல்கள் இதோ. இந்த பட்டியலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரில் நடைபெறும் கதைக்களம் பற்றிய விமர்சனம் உள்ளது. இந்த வாரத்திற்கான ப்ரோமோ அடிப்படையில் இனி நடக்கவிருக்கும் கதைக்களம் என்ன என்பது பற்றிய விரிவான விவரங்கள் இங்கு உள்ளது, இதோ.


cover image
Video Thumbnail

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 - ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் மெகா தொடராக ஒளிபரப்பாகி வரும் புகழ் பெற்ற தமிழ் சீரியல். ஸ்டாலின், நிரோஷா, ஆகாஷ் பிரேம்குமார், விஜே கதிர்வேல் என பல பிரபலங்கள் நடித்துள்ள இந்த சீரியல் தமிழக இல்லதரிசிகள் மத்தியில் மாபெரும் புகழடைந்து கொண்டாடப்படுகிறது.

Video Thumbnail

இதுவரை - இதுவரை

தன் தந்தையை தாக்கியதற்காக கதிர், சரவணன் மற்றும் செந்தில் மூவரும் இணைந்து குமாரனை சரமாரியாக தாக்கியுள்ளனர், இதனால் போலீஸில் வழக்கு தொடர்ந்த அஜய் ரத்னம், இவர்கள் மூவரையும் கைது செய்யும் படி செய்துள்ளார். இதிலிருந்து ராஜி அப்பா, அண்ணனுக்கு எதிராக காவலர்களிடம் பேசி வழக்கை திரும்ப பெரும் படி செய்துள்ளார். ஒரு பக்கம் ராஜியின் மீது கோவத்தில் இருக்கும் தந்தை, மறுபக்கம் ராஜியின் செயலின் மீது ஆச்சரியம் உடன் பாசத்தில் பாண்டியன் குடும்பம்.

Video Thumbnail

கதிர் - ராஜி - கதிர் - ராஜி

தனது தாய் (நிரோஷா) நிர்பந்தத்தால் கட்டாய கல்யாணம் செய்து கொள்ளும் கதிர் மற்றும் ராஜி தற்போது ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ தொடங்குகின்றனர். ராஜிக்காக பாண்டியன் விட்டுக்கொடுப்பதும், பாண்டியன் குடுபத்திற்காக ராஜி செய்யும் செயல்கள் என ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறது, இவர்களின் கதை. கதிர் மற்றும் ராஜி இடையே ஒரு புரிதல் தொடங்கி இவர்களும் காதல் பயணத்தை மெல்ல ஆரம்பிக்கின்றனர்.

Video Thumbnail

பழிவாங்கும் குமரன் - பழிவாங்கும் குமரன்

பாண்டியன் மகன்கள் மூவரும் இணைந்து குமரன் மற்றும் அவரின் நண்பர்களை தாக்கியுள்ள நிலையில், கதிர் ஒரு ஃபூட் டெலிவெரி வேலை செய்ததை அறிந்த குமரன், தவறாக உணவு ஆடர் செய்தது போல நாடகமாடி கதிரை அங்கு இங்கு என அலையவைத்துள்ளனர், குமரன் மற்றும் நண்பர்கள். இதனை அறிந்த கதிரின் சித்தப்பா பழனிவேல் இதனை பற்றி ராஜியிடம் கூறுகிறார்.

Video Thumbnail

சீறிப்பாய்ந்த ராஜி, அதிர்ச்சியில் கதிர் - சீறிப்பாய்ந்த ராஜி, அதிர்ச்சியில் கதிர்

கதிரை அலைய வைத்து கிண்டல் செய்ததற்காக ராஜி குமாரனை தாக்குகிறார், அச்சமயம் கதிரை காணும் குமரன் கதிர்தான் தன்னை கல்லால் தாக்குகிறார் என நினைத்து கதிருடன் மல்லுக்கு நிற்கிறார், குமரன். கதிரை தாக்க வரும் பொழுது இவர்களுக்கு இடையே சீறிப்பாய்ந்து ராஜி குமரன் உடன் மல்லுக்கு நிற்கிறார். ராஜி இவர்களுக்கு இடையே வந்ததை அறிந்த குமரன் பேசாமல் சண்டையை விட்டு விலகுகிறார்.


ராஜியின் செயலை கண்ட கதிர் அதிர்ச்சியில் உறைந்து போகிறார். இவர்கள் எதார்த்தமாக ஒருவருக்கு ஒருவர் ஒரு புரிதல் உடன் இருப்பதை காணும் மீனா இவர்களுக்கு இடையே காதல் மலர்கிறது என கிண்டலாக கலாய்த்து வருகிறார். இவர்களின் காதல் கதை காணும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் தங்களின் கருத்துகளையும் மகிழ்ச்சியையும் இணையத்தில்  வருகின்றனர்.


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+