X
முகப்பு சினி தரவரிசை

பொன்னியின் செல்வன் (PS 2) டிரைலரில் இத்தனை விஷயங்கள் இருக்கா, நீங்க இதை கவனித்தீர்களா?

Author Sakthi Harinath | Updated: Tuesday, April 4, 2023, 08:09 PM [IST]

பொன்னியின் செல்வன் (பாகம் - 02) திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளங்களில் செம வைரலாகி வருகிறது. இந்த பட்டியலில் பொன்னியின் செல்வன் டிரைலரில் இடம்பெற்ற காட்சிகளின் சுவாரஸ்யத்தைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம். முழு விவரங்கள் இதோ.


cover image
பொன்னியின் செல்வன் (PS 1)
1

இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய் என பல பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம், பொன்னியின் செல்வன், இப்படம் எழுத்தாளர் கல்கி எழுதிய நாவல் கதையை மையமாக கொண்டு திரைக்கதை வடிவமைத்து உருவாக்கப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகல் 2022ல் வெளியாகி தமிழ் மற்றும் இந்திய திரைத்துறையில் பிரமாண்ட வெற்றி பெற்றுள்ளது

பொன்னியின் செல்வன் 2
2

முதல் பாகத்தில் இறுதி காட்சியில் பொன்னியின் செல்வன் மற்றும் வந்தியத்தேவன் பயணித்த கப்பல் கடல் சூறாவளியில் சிக்கி இலங்கை கடலுக்குள் செல்கிறது. அந்த காட்சியில் இருந்து ட்ரைலர் ஆரம்பமாகிறது. கடலுக்குள் சென்று ஊமை ராணி பொன்னியின் செல்வனை காப்பாற்றுகிறார். மறுபுறம் மதுராந்தகன் சோழ நாட்டு அரசர் பதவிக்கு படைகளை திரட்டுகிறார்.

பொன்னியின் செல்வன் (PS 1)
3

தன் தம்பி மற்றும் நண்பனை இழந்த கரிகாலன், ஆத்திரத்தோடு போர் எடுத்து சோழ நாட்டை நோக்கி படையெடுக்கிறார். ஆனால் தனது தம்பி உயிர் பிழைத்த செய்தியை கேட்டு சாந்தமாகிறார். சோழ நாட்டு அமைச்சர்கள் சோழ நாட்டை மதுராந்தகன் - கரிகாலன் இருவருக்கும் சமமாக பிரிக்க வேண்டும் என ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்கள். அதற்கு கரிகாலன் ஒப்புக்கொள்ளவில்லை.

பொன்னியின் செல்வன் 2
4

கடலில் விழுந்த பொன்னியின் செல்வனை ஊமை ராணி காப்பாற்றுகிறார். இதுவரை யாரும் பார்க்காத அந்த ஊமைராணியை பொன்னியின் செல்வன் முதன் முதலில் அவர் முகத்தை காண்கிறார். உயிர் தப்பிய பொன்னியின் செல்வனை பார்க்க செல்லும் குந்தவையிடம் பொன்னியின் செல்வன் ஊமைராணி நந்தினி போல உள்ளார் என்று கூற, யார் அந்த ஊமை ராணி என்னும் கேள்வியை குந்தவை சுந்தர சோழரிடம் வினவுகிறார்.

பொன்னியின் செல்வன் (PS 1)
5

கரிகாலனை கடம்பூர் மாளிகைக்கு வரச்சொல்லி அவரை கொலை செய்ய நந்தினி மற்றும் பாண்டிய மக்கள் திட்டமிடுகின்றனர். பாண்டியர்களுடன் நந்தினியின் திட்டத்திற்கு பலர் ஆதரவு அளிக்கின்றனர். ஆனால் கரிகாலன் உடன் வந்தியத்தேவனும் செல்கிறார். அங்கு தான் சோழா நாட்டை உடைக்க சதி நடக்கிறது.

பொன்னியின் செல்வன் 2
6

கடம்பூரில் நந்தினி மற்றும் கரிகாலன் இருவரும் சந்திக்கும் தருணத்தில் அந்த மாளிகையில் பாண்டியர்கள் மற்றும் வந்தியத்தேவன் மறைந்திருக்கின்றனர். தக்க சமயம் பார்த்து அங்கு உள்ள பாண்டியர்கள் மற்றும் நந்தினி சேர்ந்து கரிகாலனை கொலை செய்கின்றனர். கரிகாலனை காப்பாற்ற வந்த வந்தியத்தேவனை அடித்து வந்தியத்தேவன் மீது பழி சுமத்துகின்றனர்.

பொன்னியின் செல்வன் (PS 1)
7

வேறுவழி இல்லாமல் வந்தியத்தேவனை சிறையில் அடைகின்றனர், சோழர்கள். சிறையில் யாருக்கும் தெரியாத ரகசியத்தை அறிந்து கொண்ட வந்தியத்தேவன், அங்கிருந்து தப்பி செல்கிறார். பொன்னியின் செல்வனை சந்தித்து அந்த ரகசியத்தை உடைக்கும் வந்தியத்தேவன், கரிகாலனின் மரணத்தில் உள்ள சதிச்செயலை பற்றி கூறுகிறார்.

பொன்னியின் செல்வன் 2
8

தன் அண்ணனின் மரணத்திற்காக பழிதீர்க்க, பொன்னியின் செல்வன் மற்றும் வந்தியத்தேவன் இணைந்து பாண்டியர்கள் உடன் போர் புரிகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+