X
முகப்பு சினி தரவரிசை

சூர்யா நிராகரித்த கதையில் சிவகார்த்திகேயன் ஹீரோ... வெளிச்சத்துக்கு வந்த உண்மை!

Author Sakthi Harinath | Published: Friday, July 19, 2024, 05:29 PM [IST]

சூர்யா நிராகரித்த கதையில் சிவகார்த்திகேயன் ஹீரோ... வெளிச்சத்துக்கு வந்த உண்மை! - முழு தகவல்கள் இதோ. இந்த பட்டியலில் நடிகர் சூர்யா நடிக்க இயக்குனர் சுதா கொங்கரா இயக்கவிருந்த 'புறநானூறு' திரைப்படத்தில் இருந்து சூர்யா விலகிய காரணத்தால், இப்படத்தில் நாயகனாக நடிக்க நடிகர் சிவகார்த்திகேயன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன் தொடர்புடைய முழு விவரங்கள் இந்த பட்டியலில் விரிவாக உள்ளது. இதோ.


cover image
புறநானூறு

புறநானூறு - இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம். இப்படத்தினை நடிகர் சூர்யா தனது '2டி என்டேர்டைன்மெண்ட்' நிறுவனத்தின் மூலம்  தயாரிக்க, இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். 


இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து துல்கர் சல்மான், விஜய் வர்மா, நஸிரியா நசீம் என பல முன்னணி நடிகர்கள் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர், இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இப்படத்தின் படக்குழு சார்பில் ஒரு ப்ரோமோஷன் வீடியோவாக வெளியானது.

புறநானூறு டிராப்

புறநானூறு திரைப்படத்தில் சூர்யா நடிக்க படப்பிடிப்பு பணிகள் ஆரம்பமான நிலையில் தீடிரென இப்படத்தினை டிராப் செய்துள்ளனர், படக்குழுவினர். சூர்யா - சுதா கொங்கரா இணைந்து பணியாற்றிய சூரரைப் போற்று என்னும் மாபெரும் வெற்றி திரைப்படத்தினை தொடர்ந்து வெளியான இப்படத்தின் அறிவிப்புகள் பல ரசிகர்களுக்கு இன்பமாக இருந்தது. தற்போது இந்த கூட்டணி முடிவுக்கு வந்துள்ள நிலையில் பல ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


ஹிந்தி திணிப்பு தான் காரணம்

புறநானூறு திரைப்படமானது அடிப்படையில் ஒரு உண்மை சம்பவம் மற்றும் போராட்டம் சார்ந்த கதைக்கரு ஆகும். இப்படத்தில் தமிழகத்தில் நடந்த 'ஹிந்தி திணிப்பு போராட்டங்கள்' ஒரு முக்கிய கதைக்களமாக இருக்கிறது. இந்த படத்தின் அடிப்படை கதையே ஹிந்தி திணிப்பு என்பதினால் வேறு கதைக்களம் மாற்ற முடியாது என சுதா கொங்கரா கூற, சூர்யா இப்படத்தினை ட்ராப் செய்வதாக அறிவித்துள்ளார்.


ஹிந்தி சினிமாவில் சூர்யா

தமிழ் சினிமாவில் நடித்து வந்துள்ள சூர்யா, பல ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படும் டாப் நடிகர்களில் ஒருவராக புகழ் பெற்றுள்ளார். தமிழ் சினிமாவை தொடர்ந்து தெலுங்கு சினிமாவிலும் இவருக்கென ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. தற்போது சூர்யாவின் மனைவி மற்றும் நடிகை ஜோதிகா இருவரும் குடும்பத்தினர் உடன் இணைந்து மும்பையில் வசித்து வருகிறார். 


தற்போது ஹிந்தி சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வரும், சமீபத்தில் சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக் திரைப்படத்திலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இனி ஹிந்தி படங்களில் நடிக்க உள்ளதால் 'ஹிந்தி திணிப்பு' கதைக்களம் இருக்கும் புறநானூறு திரைப்படத்தில் நடிக்க ஆர்வம் இல்லை என இப்படத்தினை நிராகரித்துள்ளார், சூர்யா.


சிவகார்த்திகேயன் ஹீரோ

நடிகர் சூர்யா இப்படத்தினை நிராகரித்ததும் புறநானூறு படத்தினை வேறு எந்த நடிகரை வைத்து இயக்கலாம் என "NOC' வழங்கியுள்ளார். இயக்குனர் சுதா கொங்கரா இப்படத்தினை தனுஷ் நாயகனாக வைத்து எடுக்க முயற்சித்துள்ளார், அனால் 2 வருட காலத்திற்கு தனுஷ் பிசியான நடிகர் என்பதினால், புறநானூறு திரைப்படத்தினை நடிகர் சிவகார்த்திகேயன் இடம் சொல்லி உறுதி செய்துள்ளார். சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் 'புறநானூறு' திரைப்படத்தின் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.


நடிகர் சிவகார்த்திகேயனின் திரைப்பயணத்தில் இவர் நடிக்கவிருக்கும் '25' வது திரைப்படமாகும், புறநானூறு.


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+