ஐரா இயக்குனர் சர்ஜுன் இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் த்ரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தில் நயன்தாரா இரட்டை வேடங்களிலும், கலையரசன், யோகி பாபு, ஜெயப்ரகாஷ் நடித்துள்ளார். மேலும் இத்திரைப்படத்தினை கே.ஜே.ஆர் நிறுவனம் தயாரிக்க இசையமைப்பாளர் சுந்தர மூர்த்தி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
முதல் முறையாக இரட்டை வேடத்தில் நயன்தாரா. யமுனா, எல்லாத்தையும் பயமே இல்லாமல் எதிர்கொள்ளும் பத்திரிகையாளராகவும், பவானி வெள்ளந்தியான பயந்த சுபாவம் உடைய பெண்ணாகவும். பவானி பெரிய அளவுல பேசப்படும் கதாபாத்திரமாக இருக்கக்கூடும் என படக்குழுவினர் கூறியுள்ளனர்.
கதை
சென்னையில் "மக்கள் மெயில்" என்கிற பத்திரிக்கை நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் யமுனா (நயன்தாரா), இவரது பெற்றோர்களான ஜெயப்ரகாஷ் மற்றும் மீரா கிருஷ்ணன் இவருக்கு திருமணம் செய்து வைக்க மேட்ரிமோனி மற்றும் திருமண ப்ரோக்கர்களை அணுகின்றனர். இதை அறிந்த யமுனா (நயன்தாரா) யாருக்கும் தெரியாமல் வீட்டைவிட்டு வெளியேறுகிறார்.
இவர் வேலை பார்க்கும் பத்திரிக்கை அலுவலகத்தில் இரண்டு மாதம் விடுமுறை எடுத்துக்கொண்டு கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு செல்கிறார் யமுனா (நயன்தாரா). அங்கு அவரது பாட்டியும் (குழப்புள்ளி லீலா) மற்றும் யோகிபாபு இருகின்றனர். தீடிரென பேய் இருப்பது போல வியூகம் அமைத்து இணையதளத்தில் (யூ டூப்-ல்) காட்டி சம்பாதிக்கலாம் என திட்டம் தீட்டுகிறார் யமுனா (நயன்தாரா).
இத்திட்டத்தை தனது பாட்டி மற்றும் யோகி பாபுவுடன் சேர்ந்து செயல்படுத்திகிறார். இம்முயற்சியின் மூலம் இவர் பிரபலமாகிறார். பின்னர் ஒரு நிஜ பேய் அவரை பயமுறுத்துகிறது. அதே நேரத்தில் அமுதன் (கலையரசன்) பவானி (அமுதனின் சகி) என்னும் பேய் தொடர் கொலைகளை செய்து வருவதை கண்டறிகிறார். தற்போது யமுனாவை பயமுறுத்துவதும் இதே பேய்தான்.
பிளாஷ்பேக்கில் பவானி (இதுவும் நயன்தாரா தான்), சிறுவயது நயன்தாராவாக (காப்ரேள்ள சேல்ஸ்) பிறந்தது முதல் சந்தித்த துயரங்கள், நெருக்கடிகள் எல்லாம் உணர்ச்சிபூர்வமாக கருப்பு வெள்ளை திரையில் வருகிறது. அவர் எப்படி இறந்தார்? அவர் ஏன் நயன்தாராவை கொல்ல நினைக்கிறார்? காரணங்கள் எல்லாம் எமோஷனலாக காட்டுகிறது மீதி படம்.