பாகுபலி (2015)
பாகுபலி கதை
பாகுபலி இயக்குனர் ராஜமோலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் என தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட முன்னணி நடிகர்கள் பலர் நடித்திருக்கும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படம் 2015-ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்பட பிரபல தயாரிப்பாளரான ஷோபு யார்லகட்ட தயாரிப்பில் இசையமைப்பாளர் கீரவாணி இசையில் உருவாகியுள்ளது. இப்படத்தினை தமிழில் ஸ்டூடியோ கிறீன், ஸ்ரீ தென்றல் பிலிம்ஸ் மற்றும் யூ வி கிரேஷன்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தினை விநியோகம் செய்துள்ளது.
வரலாற்று சார்ந்து நடக்கக்கூடிய ஒரு கற்பனை திரைப்படமாக உருவான இப்படத்திற்கு இயக்குனர் ராஜ்மோலியின் தந்தையான விஜயேந்திர பிரசாத் இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார். ஒளிப்பதிவாளர் செந்தில் குமார் ஒளிப்பதிவில், படத்தொகுப்பாளர் கோட்டகிரி வெங்கடேஸ்வரா ராவ் எடிட்டிங் பணியில் ஒரு பிரமாண்ட பொருட்செலவில் இப்படம் உருவாகி இந்திய ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்து மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
பாகுபலி படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் பாகுபலி 2 2017-ஆம் ஆண்டு வெளியாகி இந்திய அளவில் வசூல் சாதனை படைத்துள்ளது.
பாகுபலி படத்தின் கதை
இந்தியாவில் ஒரு பண்டைய கற்பனை ராஜ்யமாக மகிழ்மதி என்னும் ஒரு ராஜ்ஜியம் உள்ளது. அந்த ராஜ்ஜியத்தின் ராணி சிவகாமி (ரம்யா கிருஷ்ணன்) ஒரு பெரிய நீர்வீழ்ச்சியை ஒட்டியுள்ள ஒரு குகையில் இருந்து, ஒரு குழந்தையை சுமந்து வருகிறாள். அவள் தன்னைப் பின்தொடரும் படை வீரர் மூவரை கொன்று அந்த குழந்தையை காப்பாற்றுகிறார். பின் அந்த நீர் வீழ்ச்சியில் அந்த குழந்தையை காப்பாற்ற இறைவனிடம் வேண்டி உயிர் தியாகம் செய்துகொள்கிறார்.
மறுநாள் அந்த குழந்தையை காணும் உள்ளூர் கிராமவாசிகள் அந்த நீர்வீழ்ச்சியில் இருந்து குழந்தையை காப்பாற்றுகின்றனர். சிவகாமி ராணி அந்த நீர்வீழ்ச்சி மலையின் உச்சியை சுட்டிக்காட்டிய பின் ராணி மூழ்கிவிடுகிறார்.
அந்த குழந்தையை சங்கா (ரோகிணி) மற்றும் அவரது கணவர் சிவு என்ற பெயரில் சொந்த மகனாக வளர்க்கின்றனர். அவர்கள் அந்த குழந்தையை எடுத்துச் செல்ல யாராவது வரக்கூடும் என்ற பயத்தில் அவர்கள் குகைக்கு சீல் வைக்கிறார்கள்.
சிவு (பிரபாஸ்) சிறுவயதில் இருந்து அந்த மலையின் உயரத்திற்கு செல்ல வேண்டும் என ஆசை கொண்டுள்ளான். பல முறை முயற்சித்தும் தோல்வியை தழுவியுள்ளார். ஒரு கட்டத்தில் ஒரு பெரிய லிங்கத்தை தனியாளாக சுமக்கிறார். அச்சமயம் இவர் இயற்கைக்கு மாறான வலிமையைக் கொண்டிருக்கிறார் என்பது ஊர் மக்களுக்கு தெரியவருகிறது. பின் அந்த நீர்வீழ்ச்சியில் இருந்து விழும் ஒரு பெண்ணின் முகமூடியைக் காணும் சிவு, அந்த முகமூடியை தேடி மீண்டும் மலையில் ஏறுகிறார். இந்த முறை இவரது முயற்சியில் வெற்றி கிடைக்கிறது.
நீர்வீழ்ச்சியின் மேல், முகமூடி அவந்திகா (தமன்னா) என்பவருக்கு சொந்தமானது என்பதைக் கண்டுபிடிக்கிறார் சிவு. ஒரு கிளர்ச்சியாளரான போராட்ட குழு, அந்த குழு மகிழ்மதி இராச்சியத்தின் மன்னர் பல்வலத்தேவன் (ராணா டகுபதி) க்கு எதிராக கெரில்லா போரில் ஈடுபட்டது. கடந்த 25 ஆண்டுகளாக ராஜ்யத்தில் சங்கிலியால் பிடிக்கப்பட்டுள்ள முன்னாள் ராணி தேவசேனை (அனுஷ்கா ஷெட்டி) அவர்களை மீட்க இந்த குழு விரும்புகிறது. அவந்திகாவுக்கு ராணியை மீட்பதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது.
சில மோதல்களில் தொடங்கும் சிவு - அவந்திகா அறிமுகம் இறுதியில் காதலில் முடிகிறது. சிவு அவந்திகாவின் இலட்சியத்தை தனது லட்சியமாக எண்ணி ராணி தேவசேனாவை காப்பாற்ற மகிழ்மதிக்கு கிளம்புகிறார். சிவு அவளை மீட்டு அவளுடன் தப்பி ஓடுகிறான், ஆனால் ராஜாவின் சேவகன் அடிமை கட்டப்பா (சத்தியராஜ்) அவர்களை துரத்துகிறான். அவன் ஒரு சிறந்த போர் வீரர் திறன்களுக்கு பெயர் பெற்றவன். பல்லா தேவாவின் மகனான பத்ராவை (ஆதிவி சேஷ்) சிவு தலை துண்டித்த பின், கட்டப்பா தனது ஆயுதங்களை கைவிடுகிறார், பின் சிவு முகத்தை காணும் கட்டப்பா அவர் மறைந்த மன்னர் அமரேந்திர பாகுபலியின் மகன் மகேந்திர பாகுபலி என்பதை உணர்கிறார்.
பின் இவரது தந்தை அமரேந்திர பாகுபலியின் வீர, தீர செயல்கள் மற்றும் நற்பண்புகளை பற்றி சிவு-விற்கு கூறுகிறார். பின் என்ன நடந்து என்பதே இப்படத்தின் கதை.