twitter
    Tamil»Movies»Bogan»Story

    போகன் கதை

    போகன் இயக்குனர் லட்சுமணன் இயக்கத்தில், ஜெயம் ரவி, அரவிந்த் சுவாமி மற்றும் ஹன்ஷிகா ஆகியோர் நடித்த காதல், அதிரடித் திரைப்படம். 

    கதை :

    மன்னர் பரம்பரையில் பிறந்து கடனில் மூழ்கி நடுத்தெருவுக்கு வருகிறார் அரவிந்த் சாமி. வசதியாக வாழ, மக்களை ஏமாற்றி, கொள்ளையடித்து பணத்தினை சேர்த்து சொகுசாக வாழ ஆரம்பிக்கிறார். 

    அரவிந்த் சாமி அகழ்வாராய்ச்சி நடக்கும் இடத்தில் இருந்து மந்திர ஓலை சுவடியை எடுக்கிறார். அந்த ஓலை சுவடியில் இருக்கும் வித்தையை கற்றுக்கொண்டு கூடு விட்டு கூடு பாயும் வித்தையை கற்றுக்கொண்டு, பல வங்கிகளில் பணத்தினை கொள்ளையடிக்கிறார். 

    அவர் கொள்ளையடிக்க பயன்டுத்தப்படும் மனிதர்களில் ஒருவராக நரேன் அரவிந்த் சாமியின் கண்ணில் பட்டுவிட, அவரை பயன்படுத்தி கொள்ளையடிக்கிறார் அர்விந்த் சாமி. நரேனின் மகனாக வரும் ஜெயம் ரவி, தன் தந்தையை காப்பாற்றும் முயற்சியில் தீவிரமாக இறங்கி அரவிந் சாமியை கண்டறிகிறார். 

    அரவிந்த் சாமியை ஆதரத்தத்துடன் கைது செய்வதற்காக அவருடன் நண்பராக பழகுகிறார் ரவி. ஆனால், தன்னை பிடிக்க வந்த ரவியின் உடலிலே அரவிந்த் சாமி கூடு விட்டு கூடு பாய்கிறார். 

    அதனால், பல ரகளைகள், மற்றும் பல குழப்பங்கள் உருவாகின்றன. ரவியின் உடலை விட்டு அரவிந்த் சாமி எவ்வாறு வெளிவந்தார். ரவி அவரை கைது செய்தாரா ? அதன் பிறகு என்ன நடந்தது என்பதே மீதிக்கதை. 
    **Note:Hey! Would you like to share the story of the movie போகன் with us? Please send it to us ([email protected]).