twitter

    ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் கதை

    ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் இயக்குனர் ஓடம் இளவரசு இயக்கத்தில் அதர்வா, ரெஜினா கேசன்ட்ரா, ப்ரணிதா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஆனந்தி, சூரி, ராஜேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ள நகைச்சுவை காதல் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார்.

    கதை : 

    பட தொடக்கத்தில், அதர்வா தன் திருமண பத்திரிக்கையை வைக்க மதுரைக்கு வருகிறார். வந்த இடத்தில், அதர்வா தேடி வந்த ஆள் இல்லை. அங்கு இருந்த சூரியுடன் தனது மலரும் நினைவுகளை பகிர்கிறார். அங்கிருந்து அதர்வாவின் ஃபிளாஸ்பேக் தொடங்குகிறது. 

    அதர்வா கல்லூரியில் படிக்கும் போதே, ஒரே நேரத்தில், பல பெண்களை காதலிப்பவராகவும், அடுத்த காதல் வந்தால், காதலித்த பெண்களை கழட்டி விடுபவராகவும், வருகிறார். 

    அதர்வாவின் வலையில், ரெஜினா, ப்ரணிதா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி என நான்கு நடிகைகள். கடைசியில் அதர்வா அந்த நால்வரில் யாரை கரம்பிடிக்கிறார் என்பதே கலகலப்பான மீதிக்கதை. 
    **Note:Hey! Would you like to share the story of the movie ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் with us? Please send it to us ([email protected]).