ஜீனியஸ் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் ஆடுகளம் நரேன், மீரா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்த திரைப்படம். இத்திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
கதை :
நாயகன் தினேஷ் குமார் (ரோஷன்)பள்ளியில் படிப்பில் முதல் மதிப்பெண் எடுக்கும் சிறந்த மாணவர். படிப்பு மட்டுமின்றி அனைத்துப் போட்டிகளிலும் முதல் மாணவராக வந்து பாராட்டுகளைப் பெறுகிறார். தனது மகனின் அபார அறிவாற்றலைக் கண்டு வியக்கும் அவரது தந்தை (ஆடுகளம் நரேன்), அவரை மேலும் புத்திசாலியாக்க தினேஷை எந்நேரமும் படிபடி என அழுத்தம் தருகிறார். இதனால் தனது சிறுவயது சந்தோஷங்களை இழக்கும் தினேஷ், ரோபோ போல் மாறுகிறார். இதே அழுத்தம் வேலையிலும் தொடர்கிறது. நன்றாக வேலை செய்யும் தினேஷுக்கு, அவரது முதலாளி மேலும் அழுத்தம் தந்ததால், மனப்பிறழ்வு ஏற்படுகிறது. அவருடைய அதிபுத்திசாலித்தனமே அவருக்கு எமனாகிறது. இந்தப் பிரச்சினைகளில் இருந்து அவர் எப்படி மீண்டு வருகிறார் என்பதே படம்.