கோலி சோடா 2 இயக்குனர் விஜய் மில்டன் இயக்கும் திரைப்படம். இத்திரைப்படம் 2015 -ம் ஆண்டு வெளியான கோலி சோடா படத்தின் இராண்டாம் பாகமாக உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தில் நடித்த, செம்பன் வினோத் ஜோஸ், ரோஹணி, சுபிக்சா மற்றும் கிஷா குரூப் ஆகியோர் இரண்டாம் பாகத்திலும் நடிக்கின்றனர். இவர்களுடன் சமுத்திரக்கனி மற்றும் கெளதம் வாசுதேவ் மேனன் துணை கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு அச்சு ராஜாமணி இசையமைத்துள்ளார்.
கதை :
சமுத்திரக்கனி ஆரம்பத்திலேயே போலிஸாரால் கைது செய்யப்படுகின்றார், கௌதம் மேனன் அவரை விசாரிக்கின்றார்.
இதை தொடர்ந்து மூன்று இளைஞர்களை சமுத்திரக்கனி குறிப்பிட்டு பேச ஆரம்பிக்கின்றார். அந்த மூன்று இளைஞர்களுமே வாழ்க்கையில் அடுத்தக்கட்டத்திற்கு வர முயற்சி செய்கின்றார்கள், அவர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் கனி உதவுகின்றார்.
ஒருவர் ஆட்டோவிலிருந்து கார் வாங்க வேண்டும், மற்றொரு இளைஞர் ரவுடியிடமிருந்து விலகி நல்ல வேலைக்கு போகவேண்டும், இன்னொருவர் பேஸ்கட்பால் ப்ளேயர் ஆக வேண்டும்.
ஆனால் இவர்கள் வாழ்க்கையில் ஒரு சில அதிகார வர்க்கத்தால் திசை மாறுகின்றது. முன்னவே சொன்னது போல் இந்த எளியவர்கள் வலியவர்களை எப்படி எதிர்த்தார்கள் என்பதே மீதிக்கதை.