twitter

    கபிலவஸ்து கதை

    கபிலவஸ்து இயக்குனர் நேசம் முரளி இயக்கத்தில் புதுமுக நடிகர்கள் நடித்திருக்கும் காதல் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.

    கதை 
    பொது கழிப்பிடத்தில் குழந்தையை பெற்று, அங்கேயே விட்டுச் செல்கிறார் மீரா கிருஷ்ணன். அங்கு வேலை செய்பவர் குழந்தையை எடுத்து வளர்க்க, அங்கையே வளர்ந்து பெரியளாகும் நாயகன் நேசம் முரளி, பொது கழிப்பிடத்தை கவனித்து வருகிறார்.

    சாலையோரத்தில் தாங்கும் நாயகி நந்தினியின் நாடோடி குடும்பம் பொது கழிப்பிடத்திற்கு அருகே தங்குகிறது. இவர்களுக்கு பணம் சேர்த்து ஒரு வாடகை வீட்டில் குடியேற வேண்டும் என்று விருப்பம் உள்ளது.

    பின்னர் சாலையோரத்தில் தாங்கும் நந்தினியின் குடுபத்திற்கு பிரச்சனைகள் வருகிறது. இதனை கண்டு நந்தினிக்கு உறுதுணையாக இருக்கிறார் நேசம் முரளி. இதிலிருந்து இவர்களுக்குள் காதல் ஏற்படுகிறது.

    ஒரு நாள் அந்த பிரச்சனையால் நேசம் முரளி ஜெயிலுக்கு செல்கிறார். பின் தண்டனை காலம் முடிந்து திரும்பி வரும் நேசம் முரளி, சாலையோரத்தில் தங்கியிருந்த நந்தினி, அவர் குடும்பத்துடன் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைகிறார்.

    பின்னர் நாயகியை தேடி செல்கிறார் நாயகன். இறுதியில் நாயகியை நாயகன் கண்டுபிடித்தாரா? நாயகியுடன் இணைந்தாரா? என்பதே மீதிக்கதை.
    **Note:Hey! Would you like to share the story of the movie கபிலவஸ்து with us? Please send it to us ([email protected]).