twitter

    மாப்ள சிங்கம் கதை

    மாப்ள சிங்கம் தமிழ் காதல் கலந்த நகைச்சுவைத் திரைப்படம். இத்திரைப்படத்தின் இயக்குனர் ராஜசேகர். இத்திரைப்படத்தில் விமல், அஞ்சலி, மற்றும் சூரி ஆகியோர் நடிக்க என் ஆர் ரகுநாதன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளர்.

    கதை : 

    ராதாரவி மற்றும் முனிஷ்காந்த் இருவரும் ஊரில் பெரிய தலைகட்டுகள். இருவரின் குடும்பத்திற்கும் வருடா வருடம் கோவில் தேரினை யார் இழுப்பது என்று சண்டை வரும். அந்த சண்டையால் கோவில் திருவிழா தடைப்பட்டு போகின்றது. 

    ராதாரவியின் தம்பி மகன்னான விமல் எந்த வேலைக்கும் செல்லாமல் சூரி மற்றும் காளி வெங்கட்டுடன் ஊரினை சுற்றிக்கொண்டு உள்ளூர் பஞ்சாயத்துகளை கவனிக்கின்றார். முனிஷ்காந்த் குடும்பத்தில் உள்ள அஞ்சலி வக்கீலாக வருகின்றார். 

    இருக்குடும்பங்களும் பகையில் இருக்க, ராதாரவியின் மகளான மதுமிலாவும், அஞ்சலியின் அண்ணனான விஷ்ணுவும் காதலிக்கின்றனர். இதற்கிடையில் விமலும் அஞ்சலியை காதலிக்கின்றார். இவ்விரு ஜோடிகளின் காதல் இவர்களின் குடும்பப்பகையை மறக்கடித்ததா..? இவர்களின் காதல் கைகூடியதா..? இவ்விரு குடும்பங்களும் ஒன்று சேர்ந்ததா..? என்பதே நகைச்சுவையான மீதிக்கதை..
    **Note:Hey! Would you like to share the story of the movie மாப்ள சிங்கம் with us? Please send it to us ([email protected]).