பொட்டு இயக்குனர் வி சி வடிவுடையான் இயக்கத்தில் பரத், நமீதா, இனியா, மனிஷா யாதவ் மற்றும் பலர் நடித்து வரும் திகில் திரைப்படம். இத்திரைப்படத்தின் மற்ற செய்திகள் பின்னர் அறிவிக்கப்படும்.
கதை
தம்பி ராமையா - ஊர்வசியின் மகனான பரத் பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டு தனது நண்பன் பரணியுடன் சேர்ந்து மருத்துவக் கல்லூரியில் சேர்கிறார். அதே கல்லூரியில் படிக்கும் சிருஷ்டி டாங்கேவும் - பரத்தும் காதலிக்கிறார்கள்.ஒரு கட்டிடத்தில் அந்த கல்லூரியில் அமானுசிய சக்தி இருப்பது தெரிய வருகிறது. பின்னர் பரத்துக்கு பேய் பிடிக்கிறது. இதையடுத்து பரத் அவ்வப்போது பெண் போன்று நடந்து கொள்கிறார்.கடைசியில், பரத்துக்கு பேய் பிடிக்க காரணம் என்ன? அந்த பேயின் முன்கதை என்ன? பரத் மூலம் அந்த பேய் யாரை பழிவாங்கியது? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.