சகா இயக்குனர் முருகேஷ் இயக்கத்தில் சரண், கிஷோர், ஸ்ரீராம், பண்டி, ப்ரிதிவிராஜன், ஆயிர, ரவி வெங்கட்ராமன் நடித்துள்ள அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் செல்வகுமார் தயாரிக்க, இசையமைப்பாளர் ஷபீர் இசையமைத்துள்ளார்.
கதை
சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் செய்த குற்றத்திற்காக தண்டனை அனுபவித்து வருகின்றனர் சரண், பாண்டி, கிஷோர், ஸ்ரீராம் மற்றும் பிரித்விராஜ். சிறையில் சரண் மற்றும் பிருத்திவிராஜ் இருவருக்கும் மோதல் ஏற்பட, இதன் காரணமாக நெருங்கிய நண்பர்களான சரண் மற்றும் பாண்டியை ஜெயிலில் பிரித்துவிடுகிறார்கள். பின்னர் ஒரு கட்டத்தில் பாண்டி இறந்துபோக அதற்கு காரணமான பிரித்விராஜ்யை பழிவாங்க நினைக்கிறார் சரண்.
கொலைக்கு பின்னணியில் நடந்தது என்ன? இவர்கள் செய்த தவறு என்ன? இவர்கள் யார்? என்பதே இப்படத்தின் மீதிக்கதை.