twitter
    Tamil»Movies»Taana»Story

    டாணா கதை

    டாணா இயக்குனர் யுவராஜ் சுப்ரமணி இயக்கத்தில் வைபவ் நடிக்கும் நகைச்சுவை திகில் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் கலைமாமணி தனது நோபல் மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் வாயிலாக தயாரிக்க, இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.

    இத்திரைப்படத்தில் ஒளிப்பதிவாளர் சிவா ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளராக படத்தொகுப்பாளர் பிரசன்னா பணியாற்றியுள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் நடிகர் வைபவ் உடன் யோகிபாபு, நந்திதா ஸ்வீதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    டாணா படத்தின் கதை
    டாணாகாரன் என்றால் போலீஸ்காரன். டாணாகாரன் வாழ்ந்த ஊரில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகிறார் பாண்டியராஜன் அவரது மனைவி உமா பத்மநாபன். இவர்களது அன்பு மகன் தான் வைபவ்.இவர்கள் வசித்து வரும் ஊரில் பல காலமாக ஒரு பெரிய சிலை போலீஸ் உடையில் அங்கு உள்ளது. அது தான் டாணாக்காரன் சிலை. 

    போலீஸ் இல்லாத காலத்தில் கூட அவர்களை காப்பாற்றும் என்று நம்பி அச்சிலை நிறுவினார்கள் என்று சொல்லப்படுகிறது.சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் அந்த ஊருக்கு அச்சிலை தான் காவல் தெய்வம். 

    வைபவ்வை அப்பா பாண்டியராஜன் சிறு வயது முதல் போலீஸ் உத்தியோகம் காட்டி வளர்க்கிறார் . வளர்ந்த பிறகு அவனை போலீஸ்காரனாக மாற்ற அப்பா பாண்டியராஜன் முயலுகிறார் அவர் போலீஸ் ஆனரா இல்லையா என்பதே மீதி கதை.

    ப்ரோமோஷன்ஸ்

    இப்படத்தின் ஃப்ரஸ்ட் லுக் போஸ்டரானது 2019 மே 28ல் இணையதளத்தில் வெளியானது. 
    **Note:Hey! Would you like to share the story of the movie டாணா with us? Please send it to us ([email protected]).