twitter

    தென்மேற்குப் பருவக்காற்று கதை

    தென்மேற்குப் பருவக்காற்று 2010ஆம் ஆண்டு சிபு ஐசக் தயாரிப்பில், சீனு இராமசாமி எழுதி இயக்கி வெளியான ஓர் தமிழ்த் திரைப்படமாகும். இதில் முன்னணி வேடங்களில் விசய் சேதுபதி, வசுந்தரா சியேர்ட்ரா மற்றும் சரண்யா பொன்வண்ணன் நடித்துள்ளனர். திசம்பர் 24, 2010 அன்று வெளியான இத்திரைப்படத்திற்கு சிறந்த நடிப்பிற்காக சரண்யா பொன்வண்ணனுக்கும் சிறந்த பாடலுக்காக கவிஞர் வைரமுத்துவிற்கும் தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.

    இந்தத் திரைப்படம் வீராயி (சரண்யா) என்ற கைம்பெண்ணின் கதையை சொல்கிறது. தனது மகன் முருகனை (விசய் சேதுபதி) தன்னந்தனியே ஆடு மேய்ப்பவனாக வளர்த்து பெரியவனாக்குகிறாள். கதை மாந்தரை சிறப்பாக காட்டுவதில் திரைக்கதை வெற்றி கண்டுள்ளது. அன்னையின் மதிப்பினை அனைவரும் உணரும் வண்ணம் திரைப்படம் அமைந்துள்ளது.
    **Note:Hey! Would you like to share the story of the movie தென்மேற்குப் பருவக்காற்று with us? Please send it to us ([email protected]).