வர்மா இயக்குனர் பாலா இயக்கத்தில் தமிழ் சினிமாவில் பிரபல முக்கிய நடிகரான விக்ரமின் மகன் துருவ் விக்ரம் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம். இத்திரைப்படத்தில் ரைசா வில்சன், மேகா சவுத்ரி, ஈஸ்வரி ராவ் என பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்தினை தயாரிப்பாளர் முகேஷ் ஆர். மெஹ்தாவின் "E 4 என்டேர்டைன்மெண்ட்" தயாரிப்பு நிறுவனம் மூலம் இப்படத்தினை தயாரிக்க, இசையமைப்பாளர் ரதன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பினை இப்படத்தின் இயக்குனர் பாலா தயாரித்துள்ளார்.
வர்மா திரைப்படத்தின் கதை
துருவ் விக்ரம் (வர்மா) மருத்துவ கல்லூரியில் படித்து வரும் இவர், படிப்பு மற்றும் விளையாட்டு என அனைத்திலும் சிறந்தோங்கி விளங்குகிறார். கல்லூரியில் சிறந்த மானவனாக இருக்கும் இவர் அதிரடியிலும் கலக்குகிறார். இதனாலே இவரின் மேல் அனைத்து மருத்துவ ஆசிரியர்களுக்கு கோபம் உள்ளது.
அதே கல்லூரியில் முதலாம் ஆண்டில் இணைகிறார் நாயகி மேகா சவுத்ரி, நாயகியின் தந்தை நாயகன் வர்மா தந்தையின் நண்பனும், தணிக்கையாளர் (ஆடிட்டர்) ஆவார். இந்த நட்பால் நாயகன் நாயகியுடன் பழகுவதற்கு ஒரு காரணமாக அமைகிறது. பின் கல்லூரியில் மிகவும் நெருக்கமாக காதலித்து வரும் இவர்கள் கல்லூரியை முடித்து வேளைக்கு செல்கிறார்கள்.
இவர்களின் காதலை பற்றி அறியும் நாயகியின் தந்தை, நாயகிக்கு வேறு ஒரு மாப்பிளை பார்த்து திருமணம் செய்து வைக்கிறார். இதனால் காதல் தோல்வியில் மதுவிற்கு அடிமையாகும் நாயகன், நாயகியை மறக்க முயற்சி செய்து வருகிறார். மருத்துவராக ஒரு பெரிய மருத்துவமனையில் பணி செய்யும் இவர், சில தொந்தரவுகளுடன், மன நிம்மதி இல்லாமல் வேலை பார்த்து வருகிறார்.
அங்கு ஒரு விபத்தில் சிக்கி மருத்துவத்திற்கு வரும் நடிகை ரைசா வில்சன், நாயகன் வர்மா மேல் ஒருதலை காதல் கொள்கிறார். இதிலிலும் தோல்வியடைந்த நாயகன், மருத்துவமனையில் ஒரு அவரச சிகிச்சைக்கு குடித்துவிட்டு செல்கிறார். இதனால் சில தடைகள் ஏற்படுகின்றது. பின் அதனை சரி செய்கின்றனர் நாயகனின் குடும்பத்தினர்.
ஒரு வழியாக அந்த போதை பழக்கத்தில் இருந்து வெளியேறும் நாயகன், எதிர்பாராவிதமாக நாயகியை ஒரு பூங்காவில் சந்திக்கிறார், அங்கு நாயகி கணவரால் கைவிடப்பட்டு 9 மாத கர்ப்பிணி பெண்ணாக அமர்ந்திருக்கிறார். இதனை கண்டு நாயகன் என செய்கிறார் என்பதே படத்தின் கதை.