ஆதலால் காதல் செய்வீர் இயக்குனர் சுசீந்திரன் இயக்கி வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இப்படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகும்.
கதை :
இரண்டு காதலர்களில் காதலி கர்ப்பமாகின்றாள். ஆரம்பத்தில் கருவை கலைக்க வைத்தியசாலைக்கு கொண்டுசென்றபோது டாக்டர் முடியாது எனவும் திட்டியும் அனுப்பிவிடுகிறார். நாட்கள் சென்றன, 3 மாதம் ஆகிவிட்டது, எனிமேல் கருவைக்கலைக்க முடியாது எனவும் அப்படிக்க லைத்தால் தாய் உயிருக்கு ஆபத்து எனவும் வேறு சில டாக்டர்கள் கூறினர்.அவள் தான் கர்ப்பமானதை பெற்றோரிடம் மறைக்கின்றாள். ஒருமுறை வாந்தி எடுத்தபோது அவளின் தாய் பார்த்துவிட்டாள். பின்பு பெரிய பிரச்சினை நடந்து ஆண் வீட்டாரிடம் திருமணம் செய்துவைக்கக் கோரிய போது அவர்கள் சாதிப் பிரச்சினை காரணமாக முடியாது எனச் சொல்லிவிட்டனர். எனினும் பெண் வீட்டார் போலிஸ் இடம் தெரிவித்துவிடுவதாக மிரட்டினர். இறுதியில் திருமணம் நடக்காமலேயே ஒரு ஆண் குழந்தை பிறந்த்து. அதை அநாதை இல்லத்தில் சேர்த்துவிட்டனர். அதன் பின் பெண்ணுக்கு இன்னொருவனோடும் ஆணுக்கு இன்னொருத்தியோடும் திருமணம் முடிந்தது.