பிருந்தாவனம் இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில், அருள்நிதி, தன்யா மற்றும் விவேக் நடித்த நகைச்சுவை காதல் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.
கதை :
அருள்நிதி அம்மா அப்பா இல்லாமல் ஊட்டியில் ஒரு இல்லத்தில் தங்கி படித்து சலூன் கடையில் விடை செய்து வருகிறார். காத்து கேளாமலும், வாய் பேச முடியாதவராக இருக்கும் அருள்நிதி அந்த ஊரின் செல்லப்பிள்ளை.
ஒரு வேலை காரணமாக அந்த ஊருக்கு வரும் விவேக் வரு வழியில் அவர் வண்டியின் சக்கரம் சேற்றில் மாட்டிக்கொள்ள, அருள்நிதி விவேக்கிற்கு உதவுகிறார். அதிலிருந்து இருவரும் நல்ல நண்பர்களாகின்றனர்.
மறுபுறத்தில், தான்யா அருள்நிதியை விழுந்து விழுந்து காதலித்தாலும், அருள்நிதி நல்ல தோழனாகவே பழகுகிறார். ஒருகட்டத்தில் தான்யா தன் காதலை சொல்ல, அருள்நிதி காதலை மறுத்துவிட்டு சென்றுவிடுகிறார்.
தானாவின் காதலை அறிந்த விவேக் தான்யாவை அருள்நிதியுடன் சேர்த்துவைக்க முயலுகிறார். ஆனால், அப்பொழுதும் அருள்நிதி தான்யாவின் காதலை ஏற்க மறுக்கிறார். அதற்க்கான காரணத்தை வற்புறுத்தி கேட்க, அருள்நிதி அனைவரும் அதிரும்படியான ஒரு தகவலை கூறுகிறார்.
அதன் பிறகு, அருள்நிதி தான்யாவின் காதலை ஏற்றாரா? அவர் காதலை நிராகரிப்பதன் பின்னணி காரணம் என்ன ? என்பதே மீதிக்கதை.