twitter

    தில்லுக்கு துட்டு 2 கதை

    தில்லுக்கு துட்டு 2 இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில் சந்தானம், ஷ்ரிதா சிவதாஸ், ராஜேந்திரன், ஊர்வசி நடிக்கும் நகைச்சுவை திகில் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளரும் இப்படத்தின் நடிகருமான நடிகர் சந்தானம் தயாரிக்க, இசையமைப்பாளர் ஷபீர் இசையமைத்துள்ளார்.

    கதை 
    ஷ்ரிதா சிவதாஸ் (மாயா) என்ற டாக்டரை பார்த்து யார் காதலை சொன்னாலும் உடனே பேய் வந்து அவர்களை அடித்து விடுகின்றது. அப்படித்தான் மாயாவுடன் பணிபுரியும் ஒரு டாக்டர் அவரிடம் காதலை சொல்லி பேயிடம் அடி வாங்குகிறார். சந்தானம் (வெள்ளை விஜி) தன் மாமா மொட்டை ராஜேந்திரனுடன் (மொட்டை) ஏரியாவில் இரவு நேரத்தில் யாரையும் தூங்க விடாமல் குடித்து கலாய்த்து கலாட்டா செய்து வருகிறார்.

    அடி வாங்கிய அந்த டாக்டர் சந்தானம் வசிக்கும் ஏரியாவில் வசித்துவருகிறார், இந்நிலையில் சந்தானத்தின் டார்ச்சல் தாங்க முடியாமல் அவரை பழிதீர்க்க, தனது நண்பர்களுடன் சேர்ந்து அந்த பெண்ணிடம் சந்தானத்தை கோர்த்துவிட்டு, அவரை மாயாவை காதலிக்க வைக்கின்றனர்.

    சந்தானத்தையும் அந்த பேய் தாக்க, பிறகு தான் தெரிகிறது, மாயாவின் தந்தை ஒரு சூனியக்காரர், அவர் வைத்த சூனியம் என்றும். பின்பு அது சூனியம் இல்லை ஒரு பேயின் பிடியில் மாயா இருக்கிறார் என்பது தெரியவர, அதை தொடர்ந்து அந்த பேயை விரட்ட நடக்கும் நகைச்சுவை கச்சேரி தான் மீதிக்கதை.
    **Note:Hey! Would you like to share the story of the movie தில்லுக்கு துட்டு 2 with us? Please send it to us ([email protected]).