இரும்பு குதிரை 2014-இல் தமிழில் வெளிவந்த விளையாட்டுத் திரைப்படம். இப்படத்தின் இயக்குனர் யுவராஜ் போஸ் மற்றும் AGS என்டர்டைன்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தின் கதாநாயகனாக அதர்வா, கதாநாயகியாக பிரியா ஆனந்த் மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் ஜோஹ்ன்னி த்ரி ஙுயென்-னும் லட்சுமி ராய் துணை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
கதை
மைக்கேல் பிரித்திவி நாராயணன் (அதர்வா) ஒரு பீட்சா டெலிவரி பையனாக வருகிறார். அவரின் தாயாக மேரி (தேவதர்ஷினி)-யும் நெருங்கிய நண்பர்களாக ஜெகன் (ஜெகன்) மற்றும் கிறிஸ்டினா (லட்சுமி ராய்) வருகின்றனர். மைகேல் எப்பொழுதும் புகாரின் பேரில் தன்னுடைய மேலதிகாரி (மனோபாலா)-விடம் வருகிறார். மைகேல் சம்யுக்தா அக சாம் (பிரியா ஆனந்த்) மீது காதல் கொள்ள்கிறார். ஒரு நாள் சம்யுக்தா கடத்தப்படுகிறார். மைக்கேலும் அவரின் நண்பர்களும் கடத்தியவர்கள் யார் என்பதை கண்டறிகின்றனர். டான் ஸ்டோனி (ஜானி த்ரி ஙுய்ன்), இரு சக்கர வாகனத்தின் பந்தயர். தன்னுடைய தம்பி மைக்கேலுடன் பந்தயத்தில் தோற்றதால் தற்கொலை செய்து கொள்ளவார். அதனால் ஸ்டோனி மைக்கேலின் வாகனத்தை தாக்குவார். இறுதியில் மைகேலுக்கும் ஸ்டோனிக்கும் பந்தயம் வைத்து இறுதியில் யார் வென்றார் என்பது மீதி கதை.