இரும்பு மனிதன் இயக்குனர் டிஸ்னி இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம். இப்படத்தில் மதுசூதனன் ராவ், கஞ்சா கருப்பு, நிஷாந்த் என பல தமிழ் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அதிரடி மற்றும் காதல் படமாக உருவாகும் இப்படத்தினை 'ஷங்கர் மூவீஸ் இன்டர்நேஷனல்' என்னும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜோசப் பேபி தயாரிக்க, இசையமைப்பாளர் கே.எஸ். மனோஜ் இசையமைத்துள்ளார்.
இரும்பு மனிதன் படத்தின் கதை
சந்தோஷ் (படத்தின் நாயகன்) நன்றாக சமைக்க தெரிந்தவர், இவருக்கு சமையல் கலையில் அதிகமாக ஆர்வம் உண்டு. தனக்கென ஒரு சின்ன ஹோட்டல் ஒன்றை வைத்து வாழ்ந்து வருகிறார். இவர் அனாதைகளாக இருக்கக்கூடிய ஒரு இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து அவர்களை வளர்க்கிறார். பின்னர் பிச்சை எடுக்கும் ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பிறக்கும் குழந்தையையும் இவரது பிள்ளையாக பாவித்து மூவரையும் வளர்க்கிறார்.
இந்த தருணத்தில் இவரது இடத்திற்கு திருட வரும் கஞ்சா கருப்பையும் திருத்தி நண்பனாகவும் இவருக்கு உதவியாளராகவும் மாற்றி தன்னுடன் வைத்துக் கொள்கிறார். நாயகியுடன் காதலில் விழும் இவர், நாயகியை திருமணம் செய்தால் தனது குழந்தைகளை தன்னிடம் இருந்து பிரித்து விடுவாள் என எண்ணி திருமணம் செய்யாமல் இந்த அனாத குழந்தைகளுக்காக வாழ்கிறார்.
ஒரு சிறிய ஹோட்டல் வியாபாரத்தில் தொடங்கிய இவரது வாழ்க்கை தீடிரென அபார வளர்ச்சி பெற்று பல ஹோட்டல்களுக்கு அதிபராகிறார் சந்தோஷ்.
அந்த குழந்தைகள் வளர்ந்து நாயகனிடம் இருந்து அவரது சொத்துக்களை பிடுங்கி கொள்கிறார்கள். பின்னர் இந்த துரோகத்தால் நடுத்தெருவுக்கு வரும் நாயகன் மீண்டும் போராடுகிறார். இறுதியில் என்ன நடந்தது என்பதே படத்தின் கதை.