ஜெயில் இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் அதிரடித் திரைப்படம். இப்படத்திற்கு ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
ஜெயில் திரைப்படத்தின் கதை
சென்னையில் உள்ள காவேரி நகரில் வசித்து வரும் ஜிவி பிரகாஷ் குமார் சில திருட்டு வேலை செய்து வருகிறார். அவரது நண்பன் நந்தன் கஞ்சா விற்பனை செய்து வருகிறார். இவர்களின் மற்றொரு நண்பன் பசங்க பாண்டி ஒரு பெட்ரோல் பங்க்-ல் பணிசெய்கிறார்.
காவேரி நகர் இளைஞர்கள் மீது போலீசார் தொடர்ந்து பொய் வழக்கு போட்டு சிறையில் அடைகின்றனர். ஒரு கட்டத்தில் ஜிவி-யின் நண்பன் நந்தன், சிலரால் கொலை செய்யப்படுகிறார். அவரின் மற்றொரு நண்பன் பசங்க பாண்டி ஒரு போய் வழக்கில் சிக்கி சிறைக்கு செல்கிறார். பின் ஜிவி-யின் நிலை என்ன ஆனது என்பதே படத்தின் கதை.