மாவீரன் கிட்டு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் ஸ்ரீ திவ்யா நடிக்கும் அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படத்தின் கதை 1985-ம் ஆண்டு தமிழ் நாட்டு மக்களுக்காக போராடிய ஒரு வீரனின் கதையாக உருவாகியுள்ளது.
கதை :
ஊரில் மேல் ஜாதி, கீழ் ஜாதி என வேறுப்பாட்டின் கீழ் இயங்கும் 80'களில் படம் நகர்கின்றது. கீழ் ஜாதியினர் இறந்தால் அவர்களை ஊருக்குள் கொண்டுவரக்கூடாது என மேல் ஜாதியினர் கூற, இதனை எதிர்த்து போராடுகிறார் பார்த்திபன்.
கீழ் ஜாதியை சேர்ந்த கிட்டு (விஷ்ணு) தங்கள் நிலையை மாற்ற தான் ஒரு சிறந்த மாவட்ட கலெக்டராக வேண்டும் என முயற்சிக்கிறார். ஆனால், இவரது முயற்சியை தடுக்க ஒரு சிலர் சாதியின் பேரால், இவரை கொலை வழக்கில் சிறையில் தள்ளுகின்றனர்.
அந்த சாதியிலிருந்து மீள, ஜாமினில் வெளிவரும் கிட்டுவை காவல் துறை அதிகாரி ஹரிஷ் உத்தமன் மீண்டும் சிறையில் அடைத்து துன்புறுத்துகிறார். அதனால், அங்கிருந்து தப்பி ஓடிவிடுகிறார் கிட்டு.
அவரை கண்டுபிடிக்க ஊரே முயற்சிக்கிறது. ஆனால், அவர் கிடைத்தபாடில்லை. அதே நேரத்தில், இனியும் தாமதிக்க கூடாது என்று முடிவெடுத்த பார்த்திபன் போராட்டத்தை தொடங்குகிறார்.
இறுதியில், பார்த்திபனின் போராட்டம் வெற்றி பெற்றதா ? கிட்டு திரும்பி வந்தாரா ? அவருக்கு என்ன நேர்ந்தது ? என்பதே உணர்ச்சிகரமான மீதிக்கதை.