ஒரு கதை சொல்லட்டுமா இயக்குனர் பிரசாத் பிரபாகர் இயக்கத்தில் ரேஸுல் பூக்குட்டி நடிக்கும் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு தயாரிப்பாளர் ராஜீவ் பனகல் தயாரிக்க, இசையமைப்பாளர் ராகுல் ராஜ் இசையமைத்துள்ளார்.
கதை
பிரபல ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி வாழ்வின் ஒரு பகுதி தான் இந்த 'ஒரு கதை சொல்லட்டுமா' திரைப்படம். ஸ்லம்டாக் மில்லினியர் படத்திற்காக ஆஸ்கர் வென்ற பிறகு ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுக்கிறார் ரசூல் பூக்குட்டி.
அப்போது, திருச்சூர் பூரம் திருவிழாவை நேரடி ஒலிப்பதிவு செய்ய வேண்டும் என்பது தான் தனது நீண்ட நாள் ஆசை என்கிறார். இதனை பார்க்கும் பணத்தாசை பிடித்த தயாரிப்பாளர் ஒருவர் திருச்சூர் பூரம் திருவிழாவை ஆவணப்படுத்த திட்டமிடுகிறார். ரசூலின் நண்பர் ஒருவர் மூலம், அவரை இந்த ஆவணப்படத்திற்குள் கொண்டு வருகிறார்.
ரசூலுக்கு பெரிய அளவில் விருப்பம் இல்லாவிட்டாலும், நண்பருக்காக ஒப்புக்கொண்டு திருச்சூர் வருகிறார். பூரம் விழாவை முழு மனதுடன் ஆவணப்படுத்தும் முயற்சியில் இறங்குகிறார். ஆனால் பணத்தாசைப் பிடித்த தயாரிப்பாளர் ஜார்ஜின் டார்ச்சர் நாளுக்கு நாள் அதிகமாகிறது. ஒருகட்டத்தில் பிரச்சினை பெரிதாகி, அந்த புராஜெக்ட்டில் இருந்து விலகிவிடுகிறார் ரசூல். ஆனால் தயாரிப்பாளர் விடுவதாக இல்லை. இறுதியில் திருச்சூர் பூரம் திருவிழாவை ரசூல் ஒலிப்பதிவு செய்தாரா இல்லையா என்பது தான் படம்.